பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 135

அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆயிலை மன்னவர் மன்னனேல் கணவன்; மைந்தனேல் பன்னரும் பெரும்புகழ்ப் பரதன்; பார்தனில் என்னிதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள்

(57)

கைகேயி தன் மகனைக் கோசலையின் மகனாகக் கூறிக் கூனியின் முரண்பட்ட உணர்வை மாற்ற முயன்றுளாள்.

தொடர்ந்து கூனி பேசுகிறாள்: ஆடவர்கள் எள்ளி நகையாடவும் ஆண்மைக்கே மாசு உண்டாகவும் தாடகை என்னும் ஒரு பெண்ணைக் கொன்ற- முறை தவறிய (அந்தப் பையன்) இராமனுக்கு நாளை முடி சூட்டப் போகிறார்களாம்.

ஆடவர் நகையுற ஆண்மை மாசு உற
தாடகை எனும்பெயர்த் தையலாள் படக்
கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளை வாழ்வு இது எனச் சொல்லினாள்

(58)


கைகேயி மனம் மாறாததைக் கண்டு மேலும் கூனி கூறுகிறாள்: பைத்தியமே! நீயும் உன் மகனும் எப்படியாவது துன்புற்றுக் கொண்டு இருங்கள். ஆனால், உன் மாற்றாளாகிய கோசலையின் பணிப் பெண்கட்குப் பணிப் பெண்ணாய் நான் பணி செய்ய முடியாது. சீதையும் இராமனும் அரியணையில் அமர்ந்திருக்க, பரதன் கீழே கிடக்க வேண்டுமா?- என்றாள்.

வேதனைக் கூனி பின் வெகுண்டு நோக்கியே, பேதை நீ பித்தி நிற் பிறந்த சேயொடும்
மாதுயர் படுக; நான் நெடிது உன் மாற்றவள் தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன் என்றாள்

(62)

சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும்
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின்மகன் அவந்தனாய் வெறு நிலத்து இருக்க லானபோது உவந்தவாறு என் இதற்கு உறுதியாது என்றாள்

(63)