பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 137

தற்கு உரிய காரணம் வா ன்மீகியால் அவரது இராமாயண நூலில் கூறப்பட்டுள்ளது. அதாவது:எனக்கு அகவை முதிர்ந்து விட்டது- உடல் தளர்ந்து விட்டது- இறுதி நேரும்போல் தெரிகிறது. கணியரும் (சோதிடரும்) உங்கட்கு நாள் முடியும் காலம் வந்து விட்டது என்று கூறுகின்றனர்- அதனால் நாளைக்கே இராமனுக்குப் பட்டம் கட்டிவிட வேண்டும் என்று தயரதன் அவையோரிடம் கூறினானாம். இந்தக் கருத்தமையக் கூறி வான்மீகி தயரதனை ஒரளவு பழியினின்றும் காக்க முற்பட்டிருக்கிறார். கம்பரோ, இத்தகைய (சாக்குப் போக்கு) சூழ்ச்சியான உரையைச் சொன்னதாகக் கூறாமல், உண்மை எது என்பதை நூலைப் படிப்பவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என, எந்தக் காரணமும் கூறாமல் விட்டுவிட்டார்.

மன்னனின் இளையன்


கூனி என்ன சொல்லியும் கைகேயி ஏற்கவில்லை. அகவையில் (வயதில்) மூத்தவன் இருக்க, அகவையில் இளையவன் ஆட்சி புரிதல் பொருந்தாது என்ற கைகேயிக்குக் கூனி சரியான பதிலடி (சொல்லடி) கொடுக்கிறாள்! அகவையில் மூத்தவன் இருக்கும்போது சிறியவன் நாடாளலாகாது எனில், அகவையில் மிகவும் பெரியவனான தயரதன் சாகாமல் உயிருடன் இருக்கும்போதே, அகவையில் சிறியவனான இராமன் நாடாள்வது பொருத்தமா? அங்ங்னமெனில், மூத்தவனான இராமனை விலக்கி, இளையவனான பரதன் அரசாள்வதில் தவறு என்ன! என்று காரசாரமாக விடுத்தாள் பதில்:

மூத்தவற்கு உரித்து அரசெனின் முறைமையின் உலகம்
காத்த மன்னனின் இளைய னன்றோ கடல் வண்ணன்?
ஏத்து நீள்முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால் மீத்தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ?

(77)