பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 - சுந்தர சண்முகனார்


உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு

(261), என்னும் குறளின் நிழலோட்டத்தைக் காணலாம்.

வாய்மையும் தூய்மையும்

நாடு திரும்ப மறுக்கும் இராமன் பரதனிடம் வினவு கின்றான்: நாம் வாய்மைக்கு மதிப்பு அளித்தல் வேண்டும்; வாய்மை தவறிய வேறு யாதொன்றையும் உலகம் தூய்மையான உண்மையென ஒத்துக் கொள்ளுமோ?-- என வினவுகிறான்.

வாய்மை என்னும் ஈதன்றி வையகம்
தூய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ?

(115)

என்பது பாடல் பகுதி. ஈண்டு, தண்ணீரால் வெளி உடம்பைத் தூய்மை செய்யலாம்; ஆனால் உள்ளே உள்ள உள்ளத்தின் தூய்மையோ வாய்மையினால்தான் பெறப்படும் என்னும் கருத்துடைய

புறந்துய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்

(298)

என்னும் குறள் எண்ணத்தக்கது. இவ்வாறெல்லாம். கம்பர் திருக்குறளை முத்தே போல் போற்றித் தம் நூலில் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.