பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 சுந்தர சண்முகனார்


நெறி காட்டுவ

அகவை முதிர்ந்த தவசிகள் கண்ணொளி மங்கி நடப்பதற்கு உரிய வழி தெரியாமல் தவிக்கின்றனர். அப்போது குரங்குகள், தம் நீண்ட வால்களை நீட்டி அவற்றைப் பிடித்துக் கொண்டு தம் பின்னாலேயே வருமாறு வழி காட்டுகின்றனவாம்:

இடுகு கண்ணினர் இடர்உறு மூப்பினர் ஏக,
நெடுகு கூனல் வால் நீட்டின உருகுறு நெஞ்சக் கடுவன் மாதவர்க்கு அருநெறி காட்டுவ காணாய்

(30)

இதுவும் ஓரளவு உண்மையாய் இருக்கலாம். ஆனால், இது பெரும்பாலும் கற்பனையாகத்தான் இருக்கலாம்.

கங்கை காண் படலம்

கங்கை உரித்தன்று

பரதன் இராமனை அழைக்கப் பெரும் படையுடன் வந்தான். யானைகளின் மதநீர் கங்கையில் பாய்ந்ததால் வண்டுகள் மொய்த்தல் அல்லது, வேறு யாரும் பருகவும் குளிக்கவும் உரியதாகவில்லை. இதனால், மிக்க- பெரிய யானைப்படை உடன் சென்றது என்பது போதரும்:

எண்ணரும் சுரும்புதம் இனத்துக்கு அல்லது கண்ணகன் பெரும்புனல் கங்கை எங்கணும் அண்ணல் வெங்கரி மதத்து அருவி பாய்தலால் உண்ணவும் குடையவும் உரித்தன் றாயதே

(2)

வேலையே மடுத்தது

கங்கை எப்போதும் சென்றடையும் கடலை இப்போது சென்றடையவில்லையாம். பரதனுடன் வந்த படைகளாகிய கடலே (கடல் போலும் படையே) கங்கையை வழியிலே குடித்துத் தீர்த்து விட்டதாம்: