பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 - சுந்தர சண்முகனார்


நிரந்தரம் இமைப்பில நெடுங்கண் ஈண்டிய
புரந்தரன் உருஎனப் பொலிந்தது எங்குமே

(6)

திருவடி சூட்டு படலம்

இளை ஏந்தினான்

இரண்யாட்சன் என்னும் அரக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாள உலகில் சென்று தங்கிவிட்டானாம்; தேவரின் வேண்டுகோள்படி திருமால் பன்றி உரு எடுத்துக் கடலுள் புகுந்து இரண்யாட்சனை வென்று தன் (பன்றியின்) ஒற்றைக் கொம்பால் பூமியை மீண்டும் ஏந்தி எடுத்து வந்தாராம்:

கிளர் அகன் புனலுள் நின்று அரி ஓர் கேழலாய்
இளை எனும் திருவினை ஏந்தினான் அரோ

(119)

அகன் புனல் - கடல். இளை= பூமாதேவி. இவ்வாறு பல புராணச் செய்திகள் உள்ளன.

புராணச் செய்திகளை அறிவியல் நோக்கில் ஆராயலாகாது. என்னவோ புராணக் கதைகள் என்ற அளவில் அமைய வேண்டும்.