பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192 - சுந்தர சண்முகனார்


வேலாலும் வாளாலும் இன்றியே தாம்கொண்ட சூலாலே தம்முயிர்க்குச் சோர்வு

இத்தனையும் சூல் கொண்டதால் அழிகின்றனவாம்.

இந்தப் பாடலில், நண்டு-இப்பி (சிப்பி)- வாழை மூங்கில் என்பனவற்றோடு விரியன் பாம்பும் சிலந்தியும் அவ்வாறே அழியும் என்பது கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் தொடக்கத்தில் புத்தன் தாய்' என்றிருப்பது கவனிக்கத் தக்கது. புத்தருடைய தாய் மாயா தேவி. புத்தரைப் பெற்ற ஏழாம் நாளே இறந்து விட்டாள்என்பதை இது குறிக்கிறது.

முற்காலத்தில் பெண்கள் கருவுயிர்ப்பால் இறந்து போவது மிகுதி. அதனால்தான், கருவுற்றிருக்கும்போது அவர்கட்கு ஆசைப்பட்டதை ஆக்கிப் போடுதல்-வாங்கித் தருதல் போன்ற கரிசனம் பின்பற்றப்பட்டது. வயிற்றின் வழியாகக் குழந்தையை எடுக்கும் அறுவை மருத்துவம் வந்துள்ள இந்தக் காலத்திலுங் கூட, பொறையுயிர்ப்பால் பெண்டிர் சிலர் இறந்து போகின்றனர் அல்லவா? இத்தகைய அடிப்படையில், தயரதன் பிள்ளையால் இறந்தான் என்று கூறி அழுதாள் கோசலை. இராமன் பிரிந்ததாலேயே தயரதன் இறந்தான் அல்லவா?

உய்த்து மீண்ட நாவாய்

தயரதன் இறந்ததும் அவன் உடலைத் தேவியர் பற்றிப் பிடித்துக் கொண்டு விழாமல் அழுதனர். உலகப் பித்து மயக்கமாகிய சுறான் மீன் உள்ள பிறவி என்னும் கடலைத் தேவியர் கடக்க நாவாயாக அவன் உடம்பு பயன்பட்டதாம். பலமுறை சென்று திரும்பிப் பழக்கப்பட்ட நாவாயாக அவன் உடல் இருந்ததாம்.

கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வற் பிரிந்தும் கடைஓட
மெய்த்த வேந்தன் திருஉடம்பைப் பிரியார் பற்றி விட்டிலரால்;
பித்த மயக்காம் சுறவு எறியும் பிறவிப் பெரிய கடல் கடக்க
உய்த்து மீண்ட நாவாயின் தாமும்போவார் ஒக்கின்றார்

(25),