பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 193


உலகப் பித்து சுறா மீனாகவும், பிறவி கடலாகவும் தயரதன் உடம்பு நாவாயாகவும், தேவியர் பயணி களாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளது.

வனம் புகு படலம்

களிமயில்

இராமன் சீதையுடன் காட்டில் செல்லும்போது, வழியிலுள்ள பல காட்சிகளைக் காண்பித்துச் செல்கிறான்: வண்டு பாடும் பாணனாகவும் மழை இடி முரசாகவும் இருக்க, மயில் என்னும் நடன மாது ஆகின்றாள். அந்த மயில் சீதையின் சாயலைப் பல கண்களால் காண்பது போல் தோன்றுகிறதாம். இராமன் பாராய் என்கின்றான்.

பாண் இள மிஞறு ஆக, படுமழை பணை ஆக, நாணின தொகுபீலி கோலின நடம் ஆடல் பூணியல் நின் சாயல் பொலிவது பல கண்ணின் காணிய எனல் ஆகும் இயல்பின இவை காணாய் (4)

மயிலின் தோகையில் கண்கள் போன்ற பகுதிகள் பல இருப்பதால் பல கண்ணின் காணிய எனல் ஆகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

காந்தள் மலரின்மேல் அமர்ந்துள்ள கிளி, சீதையின் முன் கையில் அமரும் கிளி போன்றுள்ளதாம். இதையும் காண்க என்றான். காந்தள் மலர் கைபோன்றிருக்கும்.

இருந்தையில் தீ

பொன்னிற அசோகத்தில் கரு நிற வண்டுகள் மொய்க்கின்றன. இது, பொன் ஊது உலையில் உள்ள கரிய கரித்துண்டுகளின்மேல் தீ எழுவது போன்று உள்ளதாம். (இருந்ததை - கரி)