பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202 - சுந்தர சண்முகனார்


ஈண்டு, தயரதன் இங்கே தனது நிலையைக் கூறுவதன் வாயிலாக, உலகப் பொது உண்மையாகிய- பிள்ளையைப் பெற்ற முதியவரின் நிலையைக் கூறியிருப்பது வேற்றுப் பொருள் வைப்பு இந்த வேற்றுப் பொருள், குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியின் பின்னே கூறப்படுவதன்றி முன்னேயும் கூறப்படும்.

மந்தரை சூழ்ச்சிப் படலம்

அன்பின் ஆக்கம்

வசிட்டன் இராமனுக்கு மேலும் கூறுகிறான்: யாவர்க்கும் ஐம்புல வேட்கையை விட்டுவிட்டால் போதாது. அன்போடு நடந்து கொள்ள வேண்டும். அன்பினும் சிறந்த செல்வம் வேறில்லை.

என்புதோல் உடையர்க்கும் இலார்க்கும் தம்
வன் பகைப் புலன் மாசற மாய்ப்பது என்
முன்பு பின்பின்றி மூவுல கத்தினும்
அன்பில் நல்லது ஓராக்கம் உண்டாகுமோ?

(24)

அன்பினும் நல்ல ஆக்கம் இல்லை என்பது வேற்றுப் பொருள் வைப்பு.

நகர் நீங்கு படலம்

பிறந்தார் பெயரும் தன்மை

வசிட்டன் கைகேயியின் மாளிகைக்குச் சென்று, இறந்தானா- இறக்கவில்லையா என்ற மயக்க நிலையில் இருந்த தயரதனைக் கண்டு, கைகேயி துன்பம் இன்றி உள்ளாள்- கோசலையோ துன்புற்றிருக்கிறாள். நற்குடியில் பிறந்தவர் மாறும் தன்மை பிறரால் அறிய முடியாது- என்கிறான்.

இறந்தான் அல்லன் அரசன், இறவாது ஒழிவான் அல்லன்,
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர் கோன் மங்கை