பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 - சுந்தர சண்முகனார்

பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடின் உருத்தெரி யாமலே ஒளி மழுங்கிடும்
மருத்து உளவோ எனில் வாகடத்து இலை
தரித்திரம் என்னுமோர் மருந்தின் தீருமே

'

என்பது அப்பாடல். இரண்டாவது பாடல், தேவராசப் பிள்ளை இயற்றிய குசேலோபாக்கியானம் என்னும் நூலிலிருந்து ஈண்டு தரப்படும். அப்பாடலின் கருத்து:"அற்பர்கள் மதிக்கும் செல்வம் மிகுதியாகச் சேர்ந்துவிடின், சிலர் செருக்கு கொண்டு, வாயிருந்தும் மற்றவரோடு பேசாமல் ஊமையராய் விடுகின்றனர். சிலர், செவி இருந்தும், செல்வம் இல்லாத மற்றவர் சொல்வதைக் கேட்காமல் செவிடராகிவிடுகின்றனர். சிலர், கண்கள் இருந்தும், எளியோரை ஏறிட்டும் பார்க்காமல் குருடராகி விடுகின்றனர்.

சிறியரேம் மதிக்கும் இந்தச் செல்வம் வந்துற்ற ஞான்றே
வறிய புன்செருக்கு முடி வாயுளார் மூக ராவர். பறியணி செவியுளாரும் பயில்தரு செவிட ராவர் குறியணி கண்ணு ளாரும் குருடராய் முடிவ ரன்றே

என்பது பாடல். இந்த உலகியல் உண்மையைக் கூனி. கைகேயினிடம் கூறினாள்.

கைகேயி சூழ்வினைப் படலம்

வஞ்சனை மாதர்

பெண்கள் சிலரால் குடும்பத்தில் பல கோளாறுகளும் வஞ்சகப் போக்கும் அரக்கத்தனமும் நிகழ்வதால், தக்க பெரியோர் சிலர், பெண்களை வஞ்சகக் கோலம் உடையவர்கள் எனக் கருதி, அவர்களின் ஒத்துழைப்பை நாடமாட்டார்கள்- என்னும் கருத்தை, கைகேயி தயரதனது வேண்டுகோளுக்கு இணங்காததைக் குறிப்பிடும்போது கூறியுள்ளார்: