பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அயோத்தியா காண்ட ஆழ் கடல்

) 39

வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே
தஞ்சென மாதரை உள்ள லார்கள் தக்கோர்

(21)

என்பது பாடல் பகுதி. இந்தக் காலத்துப் பெண்கள் சிலர் குடும்பங்களில் குழப்பம் விளைவிப்பதைக் காணலாம். ஆனால், பெண்ணுரிமை பேசும் இந்த நாளில் இந்தக் கருத்து எடுபடாது.

ஏகுமின் ஏகுமின் !

ஒரு பெருவிழாவில் தெருவில் மக்கள் மிகுதியாக நெருக்கமாகக் கூடிவிடின், பின்னால் இருப்பவர்கள் முன்னால் இருப்பவர்களை நோக்கிச் செல்லுங்கள் செல்லுங்கள் (ஏகுமின்) என்று சொல்வதும், ஆனால் யாரும் நகர முடியாதபடித் தேங்கித் தெருவின் நடு நடுவே அப்படியே நின்றுகொண்டிருப்பதும், முன்னால் போகமுடியவில்லையெனில், வந்த வழியே பின்னாலே யாவது போகலாம் எனின், அதற்கும் முடியாமல் கூட்டம் நெருக்கிக் கொண்டிருப்பதும் உலகியலில் உண்டு. இராமனது முடிசூட்டு விழாவைக் காணலாம் என்று வந்த மகளிர் கூட்டமும் மைந்தர் கூட்டமும் இதே நிலையில் இருந்தனவாம்.

பாகியல் பவளச் செவ்வாய் பணை முலை பறவை அல்குல்
தோகையர் குழாமும் மைந்தர் சும்மையும் துவன்றி எங்கும்
ஏகுமின் ஏகுமின் என்று இடை இடை நிற்றல் அல்லால்
போகில மீளகில்லா பொன் நகர் வீதி எல்லாம்

(72)

வாய் புதைத்தல்

உயர்ந்தவர்களிடம் மற்றவர் பேசும் போது -ஏதாவது சொல்லும் போது, வணங்கி, கையால் வாயைப் பொத்திக்கொண்டு மெதுவாய்ப் பேசுதல் உலகியல். இவ்வாறே சுமந்திரன் இராமனிடம் பேசினானாம்: குன்றிவர் தோளினானைத் தொழுது வாய் பொத்திக் கூறும் (84)

என்பது பாடல் பகுதி.