பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல்

- 47

(அங்கவத்திரம்) இடுப்பில் குறுக்கு வாட்டத்தில் கட்டிக் கொண்டு ஆடம்பரம்- ஆரவாரம் இல்லாமல் அமைதி யுடன் செல்வது உலகியல். இராமனைக் காணச் சென்ற குகன், தன்னைச் சேர்ந்தவர்களை அப்பால் நிறுத்திவிட்டு, தான் மட்டும், கை வில்லையும் இடுப்பில் உள்ள வாளையும் கீழே எறிந்து விட்டுத் தூய- அன்புள்ள மனத்துடன் சென்று, இராமன் இருக்கும் தவப் பள்ளியை அடைந்தானாம், பாடல்:

சுற்றம் அப்புறம் கிற்கச் சுடுகணை
வில்துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன்
நற்றவப் பள்ளி வாயிலை கண்ணினான்

(10)

மற்றும் வாயிலுக்குள் புக்க குகன், இராமனைக் கண்டதும் கால்களில் விழுந்து வணங்கி, உடலை வளைத்து வாய் பொத்தி நின்றான். இராமன் குகனை அமர்க என்று கூறிய பிறகும் அவன் அமரவில்லை; உண்ணுதற்கு மீனும் தேனும் கொண்டு வந்துள்ளேன் என்று குகன் கூறியதும், மீனை விரும்பாத இராமன், மீனை விரும்பாத முனிவர்களை நோக்கிப் புன்முறுவல் பூத்தானாம். இவையெல்லாம் உலகியல் அன்றோ? பாடல்கள்;-

கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன் இருண்ட குஞ்சி
மண்ணுறப் பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான்

(13)

இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவதாகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருவுளம் என்னவீரன்
விருத்தமா தவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான்

(14)

தம்பி கூறல்

துன்பச் சூழ்நிலையில் உள்ள தலைவரைக் காணச் சென்றவர், என்ன துன்பம் என்பதைத் தலைவரிடம்