பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 ) சுந்தர சண்முகனார்

திருவடி சூட்டு படலம்

கைகயன் மகள்

ஒருவர்க்கு ஒரு பெண்ணின்மேல் காழ்ப்பு வந்து விடின், அவளது பெயரைக் கூறாமல், 'தோ அவன் பெண்டாட்டி' தோ அவன் மகள்' என இழித்துச் சுட்டுவது ஒர் உலகியல். இலக்குமணன் தன் சிற்றன்னையாகிய கைகேயியைத் தாய் என்றும் குறிப்பிடாமல்- கைகேயி எனப் பெயர் சூட்டியும் குறிப்பிடாமல், கைகயன் மகள்' என்று கூறுகின்றான். இலக்குவன் இராமனை நோக்கி, 'உன்னைப் பெற்ற அன்னையின் துயர் கண்டு மகிழ்பவளும்- குற்றம் நிறைந்தவளும் ஆகிய கைகயன் மகள் விழுந்து அழும்படிச் செய்கிறேன் பார்'- என்று கடுமையாகப் பேசுகிறான். பாடல் பகுதி:

கைதல் கண்டு உவந்தவள் நவையின் ஓங்கிய கைகயன் மகள் விழுந்து அரற்றக் காண்டியால்

(40)

யார் முகத்தை நோக்கல்

ஒருவர் பொருந்தாச் செயல் செய்ய நேர்ந்தபோது, 'நான் இதைச் செய்தால் பின் யார் முகத்தில் விழிப்பது? ஒருவர் முகத்திலும் நாணத்தோடு விழிக்க முடியாதே,' என்று கூறுதல் உலகியலில் ஒன்று. தந்தை இறந்ததையறிந்த இராமன் கூறுகிறான்: யான் அரசை ஏற்றுக்கொண்டிருப்பின் தந்தை இறக்க மாட்டார். கைகேயியின் வரத்துக்கு மாறாக யான் ஆள்வதனினும் யான் இறந்து போதல் நல்லது. இந்த உடம்பைச் சுமந்து கொண்டு ஆள்வதெனில், அப்புறம் யார் முகத்தில் விழிக்க முடியும்- என்கிறான். பாடல்:

மாண்டுமுடிவ தல்லால் மாயா உடம்பிது கொண்டு
ஆண்டு வருவது இனியார் முகத்தே நோக்கவோ?

(64)