பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் ) 53

உந்தை

தவறு செய்த ஒருவரின் பிள்ளைகள் இருவர் உரை யாடிக் கொண்டிருக்கும்போது, அவர்களுள் ஒருவர் இன்னொருவரை நோக்கி, இது நம் தந்தை செய்த தவறு என்னாமல், 'உன் தந்தை செய்த தவறு" எனக் குறிப்பிடுதல் ஒருவகை உலகியல். இதுபோல், திரும்பவும் வந்து முடிசூடிக்கொள் என்று இராமனை வற்புறுத்தும் பரதன் இராமனை நோக்கி, "உன் தந்தை செய்த தவறும் என் தாய் செய்த தவறும் நீங்க, எந்தையே! வந்து ஆட்சி செய்' என்றான். பாடல்:

உங்தை தீமையும் உலகு உறாதநோய்
தந்த தீவினைத் தாய்செய் தீமையும்
எந்தை! நீங்க மீண்டு அரசு செய்கஎனா
சிந்தை யாவதும் தெரியக் கூறினான்

(103)

உந்தை என்பது உன் (இராமனின்) தந்தை எனப் பொருள் படும். பரதன் இராமனை நோக்கி, என் தந்தையே’ என்னும் பொருளில் 'எந்தை' என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வாறு, கம்பர் தம் பட்டறிவில் கண்ட உலகியல் உண்மைகளைத் தம் காப்பியத்தில் ஆங்காங்கு-பொருத்த மான இடங்களில் குறிப்பிட்டு கற்பவர் களிக்கச் செய்துள்ளார். கல்வியில் பெரிய கம்பரின் கலைத் திறனில் இஃதும் ஒன்றாகும்.