இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம்பர் தமது இராமாயண நூலில் சிறப்பான முத்தான செய்திகள் பல தெரிவித்துள்ளார். அவற்றுள், அயோத்தியா காண்டத்தில் உள்ள சிறப்புறு செய்திகள் சில காணலாம்:
கலையின் குப்பை
அமைச்சர்கள் வழிவழியாக அமைச்சர் மரபைச் சேர்ந்தவர்கள்; கலையின் குப்பையும் கேள்விச் செல்வமும் உடையவர்கள்- எனக் கம்பர் புகழ்ந்துள்ளார். பாடல் பகுதி:
குல முதல் தொன்மையும் கலையின் குப்பையும்
பல முதல் கேள்வியும் பயனும் எய்தினார் (5)
அமைச்சர்கள் கல்வி- கலை மிக்கவர்கள் என்பதைக் 'கலையின் குப்பை எய்தினர்' என்னும் தொடரால் சுட்டிக் காட்டியுள்ளார். ஈண்டு குப்பை என்றால் என்ன?
குப்பையின் வரலாறு
கண்ட இடங்களில் கண்டபடிக் குவிக்கப்படும் கழிவுப் பொருள்களின் தொகுதி, தொடக்கத்தில் குப்பை எனப்