பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

1989- ஆம் ஆசிரியர் ஆண்டு புதுவையில் நடைபெற்ற கம்பன் விழாவில் வெளியிடுவதற் காகப் புதுவைக் கம்பன் கழகச் செயலாளர் உயர் திரு புலவர் கம்பவாணர் அ. அருணகிரியவர்கள் இட்ட அன்புக் கட்டளையின்படிச் சுந்தர காண்டச் சுரங்கம்' என்னும் நூல் எழுதித் தந்தேன். விழாவில் நூல் வெளியிடப் பெற்றது.

ஊக்குவிப்பு

அந்த நூலுக்கு நேரிலும் மடல் வாயிலாகவும் பெரிய பாராட்டு கிடைத்தது. சிலர் இரண்டு முறை படித்ததாகக் கூறினர். கம்பராமாயணத்தின் மற்ற ஐந்து காண்டங்கள் பற்றியும் நூல் எழுதுமாறு சிலர் பணித்தனர். இந்த ஊக்குவிப்பால், கம்பராமாயண த்தின் அயோத்தியா காண்டம் பற்றி இந்த நூலை எழுதியுள்ளேன்.

கம்பராமாயண அயோத்தியா காண்டம் ஒர் ஆழ் கடல். அந்தக் கடலில் குளித்து அனைத்து முத்துகளையும் அள்ளிக்கொண்டு வருவது அரிது. அடியேனால் இயன்றவரை ஆங்காங்கு உள்ள முத்துகளுள் சிலவற்றை இந்நூல் வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளேன். கம்பராமாயணப் பதிப்புகள்

கம்ப ராமாயண ஒலைச் சுவடிகள் இருநூற்றுக்கும் மேல் உள்ளன. கம்ப ராமாயணத்தைப் பலர் பதிப்பித்துள்ளனர். பதிப்புக்குப் பதிப்பு வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள் எஸ். இராஜம் அவர்கள்