பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 - சுந்தர சண்முகனார்

கேட்டான் இளையோன்;............
மூட்டாத காலக் கடைத்தீ என முண்டெழுந்தான்

(111).

தென் சொல்லும் வட சொல்லும்

இராமன் தென் சொல்லாகிய தமிழைக் கற்றுத் தேர்ந்து கடந்து துறை போகியவன்- வட சொல்லாகிய சமஸ்கிருதக் கலையின் இறுதி எல்லைவரை சென்று கற்றறிந்தவன் என்னும் பொருளில் கம்பர் கூறியுள்ளார்: தென் சொல் கடந்தான்; வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் (136) என்பது பாடல் பகுதி. இச் செய்தி மிகவும் வியப்பளிக்கிறது. இதிலிருந்து பல செய்திகள் புறப்படுகின்றன. நல்ல கருப்பனாகிய இராமனை வெண் மஞ்சள் நிறமுடைய ஆரியனாகக் கூறவியலாது. அவன் தமிழனாகத்தான் இருக்கவேண்டும். ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வட இந்தியாவிற்குள் நுழைந்து, ஆங்கிருந்த தமிழர்களை வென்று தெற்கே துரத்தி விட்டனர். இராமனும் மற்றவரும் தமிழே பேசியிருப்பர். தமிழுடன் சமசுகிருதமும் இக்காலத்தாற்போல் கற்றுக் கொண்டிருப்பர்- முதலிய கருத்துகள் புற்றீசல்கள் போல் புறப்படுகின்றன.

இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்களே, திராவிடர்கள் வடக்கே யிருந்து தெற்கே சென்றனர் என்று எழுதியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மேலும், அகழ்ந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள 'அரப்பா- மொகஞ்சதரா- சிந்து. வெளி நாகரிகம் பழைய திராவிட நாகரிகமாகும் என்னும் ஆராய்ச்சியும் ஈண்டு எண்ணத் தக்கது. மற்றும், கம்ப ராமாயணம்- ஆரணிய காண்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ள ஒரு கருத்தும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

காட்டில் இராமனை அகத்தியர் வரவேற்கிறார் . அகத்தியரும் இராமரும் அளவளாவி உரையாடிக்