பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புகு வாயில்


ம்ப ராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு பிரிவுகள் உள்ளன. இந்தக் காண்டப் பெயர்கள் வால்மீகி தம் இராமாயண நூலில் வைத்த பெயர்களே. இந்த ஆறனுள் இங்கே எடுத்துக் கொண்டது அயோத்தியா காண்டம் மட்டுமாகும்.

பால காண்டம் பருவத்தால் பெற்ற பெயர்; அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் ஆகியவை செயல் நிகழ்ந்த இடத்தால் பெற்ற பெயர்களாகும். சுந்தர காண்டம் செயல் நிகழ்த்தியவர் பெயரால் பெற்ற பெயராகும். யுத்த காண்டம் செயலால் பெற்ற பெயராகும். அயோத்தியா காண்டத்தில், அயோத்தியிலும் அதன் அண்மைக் காட்டிலும் நடந்த நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன—