பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 சுந்தர சண்முகனார்

மறுப்பவர் யாரும் இல்லை; அனைவரும் உடன்படு கிறோம். பாடல்:

ஊருணி நிறையவும், உதவும் மாடுயர்
பார்கெழு பயன்மரம் பழத்தற் றாகவும்,
கார்மழை பொழியவும், கழனிபாய் நதி
வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார் ?

(81

மந்தரை சூழ்ச்சிப் படலம்

பூண்ட காதலர்

இராமனுக்கு முடிசூட்டு என்பதால் மகிழ்ந்த மங்கையர் நால்வர் விரைந்து ஒடிக் கோசலைக்கு இதைக் கூறினராம். இப்பெண்டிரின் மகிழ்ச்சி மிகுதியையும் அவர்களின் ஒட்டத்தின் விரைவு மிகுதியையும் பின் வருமாறு கம்பர் கூறியுள்ளார். மகிழ்ச்சி கொண்ட பெண்டிர் நால்வரும் விரைந்து ஒடியபோது, மார்புக் கச்சு அவிழ்ந்து தெரியும் கொங்கையினராகவும், அவிழ்ந்து தொங்கும் நீண்ட கூந்தலராகவும், அவிழ்ந்தகலைந்த உடையினராகவும் ஓடினராம். ஆனால், துள்ளித் துள்ளி ஒடும் ஒட்டத்தின் விரைவினால், சிறிய இடுப்பு இன்னும் ஒடியவில்லையாம். ஆடுகின்றனராம்; பண்ணோடு பொருந்தாமல் கண்டபடி பாடுகின்றனராம்; பார்த்தவர்களை எல்லாம் கைகூப்பிக் கும்பிடுகின்றனராம்; என்ன சொல்வதென்று அறியாமல் தவிக்கின்றனராம்.

ஆண்ட அந்நிலை ஆக அறிந்தவர்
பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர்
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர்
ஈண்ட ஓடினர் இட்டு இடை இற்றிலர்

(1)

ஆடு கின்றனர் பண் அடைவு இன்றியே
பாடு கின்றனர் பார்த்தவர்க்கே கரம்