பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

59

அருள்நெறி முழக்கம்


தமிழரசுக் கழகத்தாரின் குறிக்கோள் - ஏன்? தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவன் குறிக்கோளும் நாடு, மொழி, கலாசாரம் என்ற அடிப்படையில்தான் இருத்தல் வேண்டும்.

சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் நோயைப் போக்கத் தமிழ்த்தந்தை திரு.வி.க அவர்களின் நூலே சிறந்த மருந்தாகும்.

நிற்க. தமிழாட்சி வேண்டுமென்று கேட்பது வெறுப்பால் அன்று. அவரவர் மொழியில் அரசு நடந்தால் எதனையும் எளிதில் முடித்துக் கொள்ள முடியும் என்ற காரணத்தால்தான் தமிழரசு வேண்டும் என்று கேட்கின்றோம். நாங்கள் எல்லா மொழிகளும் வளரவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றோம். முதற்கண் எங்கள் தாய்மொழியாம் தமிழ்மொழியை வளப்படுத்திய பின்னர் தான் நாங்கள் வேறு எதனையும் கைக்கொள்வோம். எல்லாவற்றிற்கும் வாழ உளமார இடங்கொடுக்கும் நாங்கள் வேற்றாரால் எங்கள் தாய்மொழிக்கு இடையூறு ஏற்பட்டால் அதைப் பார்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். மாற்றாரின் செயல்களனைத்தும் அவர்களின் சின்னாட் பிழைப்பிற்குத்தான் என்பதை எல்லோரும் நன்கு உணர வேண்டும்.

ஒவ்வொரு மனினும் நேர்மையுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்தல் வேண்டும். எதனையும் நாம் வெறுத்து ஒதுக்குதல் ஆகாது. வெறுத்து ஒதுக்குவோமாயின் நம் வாழ்வில் போட்டியையும் பொறாமையையும் வளர்த்துக் கொண்டவராவோம்.

தமிழ்நாட்டிலே பல அருமையான இலக்கியங்கள் இருக்கின்றன. அதனைப் படித்துப் புரிந்து கொள்ளுகின்ற பயன் பெறுகின்ற நல்லுள்ளம் படைத்த பெருமக்களைத்தான் காண முடியவில்லை. வேண்டாத ஒன்றைப்பற்றி ஆராய முற்படுகின்றார்களேயன்றி “நாட்டின் நிலைமையறிந்து நாம் யாது செய்தல் கூடும்” என்று ஆராய்வாரைக் கண்டிலேம். எங்கோ தோன்றும் சிலரும் காலப் போக்கிற் சுயநலக்காரர்களாக மாறி விடுகின்றனர். நாட்டின் சூழ்நிலையும் மக்களின் போக்கும் அவர்களை மாற்றி விடுகின்றன.