பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

64

அருள்நெறி முழக்கம்


கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லுந் தேளத்துக் குறுதுணை தேடுமின்;
மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்குஎன்”

தெய்வத்தைக் காண வேண்டுமானால் நம் உள்ளம் தூய்மையாக இருத்தல் வேண்டும். குழப்பமான உள்ளத்தில் இறைவன் குடிகொள்ளான். தெய்வத்தைக் கண்டுணர்ந்த பெருமக்களின் தொண்டு பூண்டொழுகி அவர் வாழ்வைப் பின்பற்றிச் சிறப்படைவீர்களாக! பொய்மொழிகளைக் கூற அஞ்சுவீராக! புறங்கூறா அறத்தைப் போற்றுவீராக! புலால் உண்டலைத் தவிர்வீராக! உயிர்க்கொலை மறந்தும் புரியாது வாழ்க! தான்மும் தவமும் தக்கவாறு இயற்றுக! செய்ந்நன்றி மறவாச் சீலம் பெறுக கூடா நட்பைக் கோதெனத் தள்ளுக! பொய்ச்சாட்சி பகர்வதையொழித்துப் பொலிக பெரியோர் பொருள்மொழி பேணிக் கேட்க அறவோர் அவையில் அனைத்துங் கேட்க! பியர் மனையஞ்சும் பேராண்மை பெறுக! அல்லற்படும் உயிரையாதரித் துயர்க! இல்லறம் பேணி இசை நனி பெறுக! கள், களவு, காமம், பொய், வீணர்குழு இவற்றை அறவே விட்டொழிப்பீராக! மறுமைக்குரிய இன்றியமையாத் துணையைத் தேடிக்கொள்க!

உள்ளந்தொடும் இத்தகு அரும்பெரும் அறவுரைகளை இளங்கோவின் அருள் உள்ளம் வாரி வழங்குகின்றது.

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க
அதற்கு தக"

என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப, ஒவ்வொருவரும் இப்பொன்னான கருத்துக்களைப் படித்துணர்ந்து அவற்றைத் தம் வாழ்விற் கலக்கச் செய்தல் தலையான கடமையாகும்.

வாழி தமிழன்னை வாழி தமிழர்குலம்
வாழி சிலம்பின் வளம்.


மதுரைத் தமிழரசுக்கழகத்தில் தவத்திரு அடிகளார் ஆற்றிய உரை.