பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

67

அருள்நெறி முழக்கம்


நிலையங்கள் போதாவென்று புதிதாக மருத்துவ நிலையங்கள் கட்ட அரசியலார் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

செய்தித்தாளை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் மருந்து விளம்பரங்கள்தான் இருக்கின்றன. நோயால் வருந்துகின்ற ஒருவன் அந்த விளம்பரங்களைப் பார்த்து மருந்து சாப்பிட்டால் அவன்நிலை என்னவாகும்? ஒரே வயிற்று வலிக்குப் பலப்பல மருந்துகள் விளம்பரம் செய்யப்படும். இன்று வருகின்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்து அந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டவன் அடுத்த வாரத்தில் மற்றொரு மருந்தின் விளம்பரம் வந்தால் அதையும் வாங்கிச் சாப்பிட்டால் அவன் நிலை என்னாகும்? சில நாட்களுக்குப் பின் மரிக்கவிருக்கின்றவன் சில நாட்கட்கு முன்னேயே மரித்து விடுவான். அதைப் போலத்தான் புத்தங்களும்.

“பெயரைக் கண்ட மாத்திரத்தில் மட்டும் அதனைப் படிக்கத் தொடங்காதே" என்று கூறுகின்றார் ரஸ்கின். “தன்னுடைய நோய் எது? அதற்கு ஏற்ற மருந்து எது?” என்று மருத்துவரை நாடிச் சென்று அவர் ஆலோசனையின் பேரில் மருந்து உண்டால்தான் அது பயன்தரும். அதைப்போல, அறிஞர் பெருமக்களின் ஆலோசனையின் பேரில் நூல்களைப் படித்தால்தான் கல்வி பயன்தரும் என்று ரஸ்கின் சொல்லுகின்றார்.

படிக்கத் தக்கவை எவை என்ற துறையில் பல பேராசிரியர்கள் தமது கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். "பிரான்சிஸ் பேக்கன்” என்பவர் “ஒருசில நூல்கள் படிக்கத்தக்கவை; ஒரு சில அனுபவிக்கத்தக்கவை” என்று சொல்லுகின்றார். இன்றைய சூழ்நிலையில் ஒரு சில பார்க்கத்தக்கவை என்று சொல்லலாம். பேக்கன் காலத்தில் இப்படிச் சேர்த்துக் கொள்ள வேண்டிய இன்றியமையாமை இருந்திராது. இன்று வரும் இலக்கியங்கள் இந்த நிலைமையில் இருக்கின்றன. நச்சுக் கருத்துக்கள் மிக மிக எளிதாக வீடு தேடி வருகின்ற நிலையில் பரப்பப்படுகின்றன.