பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

88

அருள்நெறி முழக்கம்


பட்டம் ஏற்பு:திருநாமம் ஸ்ரீலருஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
1951 காரைக்குடிக் கம்பன் விழாவில் புதரிடை மலர் என்ற
தலைப்பில் அறிஞர்களின் நெஞ்சம் கவர்ந்த சொற்பொழிவு
1952 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45-ஆவது குருமகாசந்நிதான்மாக எழுந்தருளல்.
அருள்நெறித்திருக்கூட்டத்தோற்றம்
"மணிமொழி” என்னும் பெயரில் இயக்கப்பத்திரிகை வெளியிடல்.
1953 ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத்
திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்ககால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) "வள்ளல் பாரி விழா” தொடங்குதல்.
பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல்.
இலங்கைப் பயணம்- இரண்டுவாரச் சுற்றுப் பயணம்.
1954 இராசாசிதலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்டமாநாடு.
திராவிடர் கழகத்தலைவர் பெரியார் சந்திப்பு.
தாய்லாந்து, இந்தோசீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்)
1955 அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல்.
"தமிழ்நாடு" நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல்.
1956 அறிஞர் அண்ணா குன்றக்குடித் திருமடத்திற்கு வருகை.
ஆச்சார்ய வினோபாவே திருமடத்திற்கு வருகை.
1958 குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல்.
1959 ஆ. தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல்.
பாரதப்பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை.
1960 மத்தியசேமநலக் குழு உறுப்பினராதல்.
1962 சீனப்போரின்போது தங்க உருத்திராட்ச மாலையைத்