பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

89

அருள்நெறி முழக்கம்


திருவெற்றியூர்க்கூட்டத்தில் ஏலம்விட்டு ரூ. 4000 தருதல்.
மதுரைமீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சுனை தொடங்குதல்.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசு வழக்குத் தொடர்தல்.
1966 தமிழ்நாடு தெய்வீகப் பேரவை தோற்றம்
1967 திருப்புத்தூர்த்தமிழ்ச்சங்கம் தோற்றம்.
திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறைநெறிப்படி-போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்தூர்த் தமிழ்ச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல்.
1968 இரண்டாம் உலகத்தமிழ்மாநாடு-"திருக்குறள் உரைக்கோவை" நிகழ்ச்சிதொடக்கவுரை நிகழ்த்தல்-
திருக்குறள் இந்திய மாநாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல். இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணாநோன்பிருத்தல்.
கீழவெண்மணித் தீவைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல். புத்தாடை வழங்குதல்.
1969 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி ஏற்பு.
கலைஞர் மு. கருணாநிதி பாரி விழாவிற்கு வருகை. கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை பொறுப்பேற்றல்.
தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறல்.
1970 சட்டமன்றமேலவையில் இந்து அறநிலையத்திருத்த மசோதா-
சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல்பற்றிப் பேசுதல்.
1971 தமிழ்நாடு சமாதானக் குழுத் தலைவராதல்.