இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
91
அருள்நெறி முழக்கம்
அவர்கள் குன்றக்குடிக் கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல். | |
1985 | நடுவணரசு திட்ட ஆணைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை. |
கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல். பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல் மணிவிழா. | |
1986 | தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது பெறுதல். |
இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் பாராட்டி. “Kundrakkudi Pattern” என்று அறிவித்தது. | |
1989 | இவர் எழுதிய"ஆலயங்கள் சமுதாய மையங்கள்” என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது. |
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் (D.lit) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. | |
1991 | இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது. |
இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம். அரபுநாடுகள் பயணம். | |
1993 | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் "தமிழ்ப்பேரவைச் செம்மல்" விருது வழங்கிச் சிறப்பித்தது. |
1995 | இறைநிலையடைதல். |