பக்கம்:அறவோர் மு. வ.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

35

விட்டுக் கொடுத்து வாழ்வதைப் போலவே குற்றம் காணாமல் வாழ்வதும் அமைதிக்கு வழி வகுக்கும் என்பதை,

"காதல் வாழ்க்கையில் ஒருவகைக் கண்மூடி வாழ்வு வாழவேண்டும். குழந்தைபோல் வாழவேண்டும். தொடக்கத்தில்தான் ஆராய்ச்சி செய்யவேண்டும். பிறகு ஆய்வு வரைக்கும் ஆராய்ச்சியும் கூடாது. அறிவும் மிகுதியாகக் கூடாது. ஒருவர் குற்றம் ஒருவருக்குத் தெரியாத அன்பு வாழ்வு. கண்மூடி வாழ்வு வாழ வேண்டும்"
-கள்ளோ காவியமோ, பக். 104

எனக் கள்ளோ காவியமோ நாவலில் மங்கையின் வழி மொழிகின்றார். பொறுமையோடும், விட்டுக்கொடுத்தும், அன்போடும் பண்போடும், நடத்தும் எளிய வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் எண்ணும் எண்ணத்தாலும் ஒத்துப் போகவேண்டும். ஒத்து நடந்தால்தான் குடும்பத்தில் இன்பம் பெருகும். இல்லையேல் அங்குத் துன்பமே மிகும் என்பதை,

"ஆண் எண்ணுவதுபோல் பெண்ணும் எண்ண வேண்டும். இருவரும் ஒருங்கே உண்பதும் உறங்குவதும் பெருமை இல்லை. ஒருங்கே எண்ணவேண்டும் எண்ணத்தில் ஒத்திருந்தால் அதுதான் குடும்ப இன்பம். எண்ணத்தில் மாறுபட்டிருந்தால் அதுதான் குடும்பத் துன்பம்"
-கள்ளோ காவியமோ, பக். 104

என்று மங்கையின் மூலம் உணர்த்துகின்றார். எண்ணும் எண்ணத்தால், அன்பால், பண்பால் ஒன்றிய காலை உயவுக் குரல் கொடுக்கும் அன்றில் போன்று ஒன்றிய வாழ்வு நடாத்தும் வாழ்க்கையில்,

"கணவன் மனைவி என்றால் எதுவும் பிரிக்க முடியாது. எமன் தவிர யாரும் பிரிக்க முடியாது"
-மண் குடிசை, பக். 218
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/38&oldid=1234830" இலிருந்து மீள்விக்கப்பட்டது