பக்கம்:அறிவின் கேள்வி.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறிவின் கேள்வி
சிந்தனை சந்தேகிக்கிறது



நாட்டிலே அறிவின் விழிப்பு ஏற்படுவதை, சிந்தனைப் பொன் ரேகைகள் அறியாமை அந்தகாரத்தைத் துரத்தியடித்து எங்கும் பரவுவதை, பெரும்பாலோர் விரும்பவில்லை எனத் தோன்றுகிறது.

இதில் வியப்பில்லைதான். அறிவு ஒடுக்கப்பட்டு அஞ்ஞான இருள் அசுர ஆட்சி புரிகின்ற காலத்து, ஆரவாரித்து வாழ்கின்ற ஆந்தைகளும், குதூகலக் கோலாகல லீலைகள் புரிய முடிகிற கூகைகளும் உதயத்தின் செவ்வொளியையோ, அதன் முன்னறிவிப்பான விடிவெள்ளியையோ கண்டு மகிழ்ந்துபோக முடியாதுதான். கலவரப்பட்டு காட்டுக் கூப்பாடு போடலாம்.

இன்றையத் தமிழ் நாட்டிலே நடப்பது அதுதான். அறிவு வளரக்கூடாது; மக்களின் சிந்தனை திறனைத் தூண்டிவிடக்கூடாது; மக்களை மனிதர்களாக்க ‘தோழர்களே, எண்ணிப்பாருங்கள்!தூங்கிக் கிடப்பானேன்? இன்றைய நிலை இது. இனியும் இப்படியே வாழ விரும்புகிறீர்களா?' என்று விழிப்பூட்டக்கூடாது.-இவ்விதம் செய்வது தவறு, இப்படிச் செய்கிறவன் சமுதாய விரோதி, தர்மத்தின் விரோதி என்றெல்லாம் அலறுகிறார்கள் ஆண்டாண்டு தோறும் தர்மம், மதம் கடவுள், விதி எனப் புலம்பி வாழ்கிறவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவின்_கேள்வி.pdf/7&oldid=1299847" இலிருந்து மீள்விக்கப்பட்டது