பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கடல்‌ மாசடைதல்‌

242 கடல் மாசடைதல் தொகுத்துக் கரையை அடைந்தபின் அப்புறப்படுத் துவதும், கப்பலிலேயே பொசிக்கி அழித்துவிடுவதும் திண்மப்பொருள் பகுதி பொறுத்துக் கையாளப்படும் வெவ்வேறு முறைகளாகும். நீர்ப் பகுதியைத் தனியே தூய்மை செய்து அகற்றுவதோ, அதே நீரை மீண்டும் கழிவைத் தள்ளிக்கொண்டு வர விசை ஓட்டம் கொடுத்துப் பயன்படுத்துவதோ கழிலை எவ்வகையி லும் கடலில் விடாமல் நீர்ப்பகுதியை ஆவியாக்கி லிட்டுத் திண்ம பகுதியை எரித்து விடுவதோ உண்டு. இவ்வாறு சாக்கடைக்கழிவு கடலை மாசுபடுத்தா கிருக்க ஏற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படு கின்றன. கடற்கரைக் கழிவுகள். கடலில் குப்பையைக் கொட்டும் பழக்கம் சில கடலோர நகரங்களில் உண்டு. உடைந்த நெகிழிப் (plastic) பொருள்களை அழிக்க, கடல்தான் பயன்படுகிறது. எனவே, 1973 இல் நடைபெற்ற அனைத்துவகக்கடல்துறை ஆலோ சனை நிறுவனத்தின் மாநாடு சில விதிமுறைகளை வகுத்தது. திண்மக் கழிவுகளைப் பொறுத்த வரை சில விதிமுறைகளாவன: கடலில் நெகிழிப் பொருள்களைப் போடக் கூடாது. கரையிலிருந்து தொலைவில் நடுக்கடலில் போடுவதும் கூடாது. கரையிலிருந்து 5கி.மீ தொலை வுக்குள் கடலில் எவ்விதக் குப்பையையும் கொட்டக் கூடாது. 5.கி.மீட்டருக்கு அப்பால், நன்கு அரைத்துக் கூழாக்கி, தூய்மை செய்து கேடுகளை நீக்கிக் குப்பையைப் போடவேண்டும். 20 கி.மீட்டருக்கு அப்பால் உணவுக் கழிவுகள், குப்பைகள் வற்றைப் போட வேண்டும். மிதக்கக்கூடிய குப்பை எதையும் 42 கி.மீட்டருக்கு அப்பால்தான் போட வேண்டும். கடலை ஒட்டிக் கப்பல் கட்டும் தொழிற்சாலை கள் அமைக்கப்படுகின்றன. அத்தொழிற்சாலைகளி லிருந்து அமிலக் கழிவு, காரப் பொருள் கழிவு. சயனைட் நச்சுப்பொருட்கழிவு, குரோமியம், நிக்கல், தாமிரம், துத்தநாகம் போன்ற உலோகக் கழிவு, பாஸ்ஃபரஸ் கலந்த கழிவு, கரிமப் பொருட்கழிவு, எண்ணெய்க்கழிவு எனப் பலவகைக்கழிவுகள் வரக் கூடும். கழிப்பறைக் கழிவுகளும் உண்டு. மழைநீர் விழுந்து நச்சுக் கழிவுப் பொருள்களுடன் கலந்து சென்றால் கடல் மாசுறும். தொழிற்சாலைக் கழிவுநீர் செல்வதற்குத் தனியாவும், மழைநீர் செல்வதற்குத் தனியாகவும் வடிகால் இருக்க வேண்டும். தீங்கான பொருள்கள் கலந்த கழிவுநீரைத் தனியே தொட்டி களில் தேக்கித் தூய்மை செய்த பின்னரே வெளியில் விடவேண்டும். கழிப்பறைக்கழிவுநீர், கரிமப் பொருள் களுடன் கூடிய கழிவுநீர் ஆகியவற்றுக்குத் தனி வடி கால் இருப்பதும், அவற்றைத் தேக்கி மாசசுற்றி வெளியில் விடுவதும் வேண்டும். அணு ஆற்றல் கொண்டியங்கும் கப்பல் கட்டும் போது கதிரியக்கக் கழிவுப்பொருள் உண்டாகும். அதை அப்புறப்படுத்துவதற்கு அறிவியல் திறன் தேவையாகும். கதிரியக்கக் கழிவு, கடலில் கலக்கு மானால் விளையும் தீங்குகள் அச்சந்தரத்தக்கவை. கதிரியக்கத்தால் தாக்கமுற்ற மீன்கள் பெருந்தீங்கிற் குள்ளாகின்றன. அம்மீன்களை உண்ண நேரிடும் மனிதருக்கு இரத்தப்புற்று நோய் உண்டாகிறது. கதிரியக்கம் சூழலின் தன்மையையே கெடுத்துவிடும். கதிரியக்கக் கழிவு பொறுத்து மிகுந்த விழிப்பும் பொறுப்பும் தேவை. அணு உலைகளிலிருந்து பெறப் பட்ட கதிரியக்கக் கழிவுப் பொருள்களைச் சில வல்லரசுகள் கடலின் ஆழத்தில் தக்க பாதுகாப்புடன் போட்டுள்ளன எனச் செய்திகள் வந்தன. கதிரியக்கம் நெடுநாள் நீடிக்கக்கூடிய யது, கடுமையான விளைவு உண்டாக்கக்கூடியது என்பதால் கதிரியக்கக் கழிவு நீக்கம் தொடர்பாகப் பல ஆய்வு கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்கம் விளை வதைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படுகின்றன. கடல் எந்த அழிவையும் தாங்கவல்லது என்பதாலோ, கடலே கழிவைப் போடப் பாதுகாப்பான இடம் என்பதாலோ, முன்பு செய்யப்பட்ட குற்றங்கள் தற்போது இல்லை. சூழல் பாதுகாப்புணர்வு வளர்ந்திருப்பதால் பொறுப் புணர்ச்சியும் வளர்ந்துள்ளது. களை எரியக்கூடிய திண்மக் கழிவுகளையும், நீர்மக் கழிவுகளையும் எரித்து அழிப்பதற்காகப்பல கருவிகள் உள்ளன. தார்,நெகிழி போன்ற கழிவுகளுக்கும், அழுக்கு நீருக்கும் சுழலும் காளவாய் (rotary kiln incinerator) பயனுள்ளது. பெரிய அளவிலுள்ள கழிவு களுக்கு இது நன்கு பயன்படும். திண்ம, நீர்ம மாசுப் பொருள்களை எரித்து அழிக்கும்போது சுற்றுப்புறக் காற்று மாசடையா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும். கடற்கரையில் சேரக்கூடிய திண்மப் பொருட் கழிவுகளைப் பொறுத்து முன் ஆய்வு செய்து சூழல் பாதுகாப்பு ஏற்பாடு அமைத்தல் வேண்டும். கழிவின் அளவு, தன்மை, அது சுற்றுப்புறத்தைத் தாக்கக் கூடிய விவரம், கழிவை அகற்றுவதற்கும் அதிலுள்ள தீமைகளை நீக்குவதற்கும் தக்க ஏற்பாடு, செலவு குறைந்த அதே சமயம் பயன்மிகுந்த மாற்று ஏற்பாடு கள், தொழில் நுட்பத் தேவை போன்றவற்றை நன்கு ஆராய்ந்து செயல்படுதல் வேண்டும். கடற்கரைக் காற்று மாசடைதல். கப்பல் கட்டும் தளத்து நடவடிக்கைகள், மொத்தச் சரக்கு ஏற்றுதல் இறக்குதல், கப்பல் வெளிவிடும் புகை ஆகியவை காரணமாகத் துறைமுகக் காற்று மாசடைகிறது. கப்பல் கட்டும் தளத்தில் பல வகை வேலைகள் நடைபெறும்போது தூசி எழும். துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் எரிபொருள் எரிந்து புகை வரும். நிலக்கரி, கோதுமை, இரும்புத் தாது, பாஸ்ஃபரஸ்