கடல் வளர்ச்சித் துறை 253
களைப் பயன்படுத்தித் துய்ப்பதற்கு முயற்சி செய்ய லாம். கடல்தரும் ஆற்றல்வளங்களுள் குறிப்பிடத் தக்கவை ஓதம் (tide) வழங்கும் ஆற்றல், சூரியனின் கதிரியக்க ஆற்றல், அலை ஆற்றல், வெப்ப ஆற்றல் களாகும். ஓதம் வழங்கும் ஆற்றல். சூரிய, சந்திரனின் ஈர்ப்பு ஆற்றலால், கடலில் ஓதங்கள் உண்டாக, கடலின் நீர் உயரம் அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும். அனைத்து இடங்களிலும் ஓதங்களின் ஆற்றல் ஒன்று போல் இருப்பதில்லை. சிவ இடங்களில் ஓதங்களின் ஆற்றல் குறைவாக இருக்கும். வேறு சில களிலோ, அது கடலின் நீர்மட்டத்தை 60-70 அடி வரைகூட உயர்த்தித் தாழ்த்தும். பெருங்கடல்களில் ஓதம் வழங்கும் ஆற்றல் 3×102 வாட்ஸ் அளவு உள்ளது என்றும் அதில் 350twh அளவு ஆற்றலை ஆக்க வழியில் பயன்படுத்த இயலும் என்றும் கடலறி வியலாளர் கண்டறிந்துள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு வேறுபடாமல், ஒரே அளவு ஆற்றலைத் தொடர்ந்து தருவது ஓத்தின் தனிச்சிறப்பாகும். சூரியக் கதிரியக்க ஆற்றல் (solar radiation ). புவிப் பரப்பை நோக்கி வரும் கதிரவனின் கதிரியக்க ஆற்ற லில் பெரும்பகுதியைப் பெருங்கடல் பெற்றுக் கொள் கிறது. நாளொன்றுக்கு ஏறத்தாழ 80 மில்லியன் மெகாவாட் அளவு ஆற்றலைப் (மனிதன் பயன்படுத்து வதைப்போல் 50,000 மடங்கு மிகு ஆற்றல்) பெருங் கடல், சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து பெறுகிறது. கடலின் மேல்மட்டத்திலிருந்து இந்தச் சூரியக்கதிர் ஆற்றலைப் பிரித்தெடுத்து ஆக்க வழியான வேலை களில் பயன்படுத்தும் முயற்சியிலும் கடலறிவியலாளர் ஈடுபட்டுள்ளனர். அலை ஆற்றல் (wave energy). கடல் அலைகள் ஆழமற்ற நீரில் நுழையும்போது, ஆழமான நீர் அடுக்கின் வழியே கொண்டு செல்லப்பட்ட ஆற்றல் மெல்ல மெல்ல ஆழம் குறைந்துவரும் நீரில் ஒரு முனைப்படுத்தப்படுகிறது. அலை ஒழுங்கு மாறும் போது ஒவ்வொரு கிலோகிராம் நீரும் மேலும் மேலும் ஆற்றலைத் தன்னுள் தேக்கிக் கொள்ளும் அலை ஆற்றலை நேரடியாகவோஉடையும் அலைகளிலிருந்து வெளிப்படும் ஆற்றலாகவோ பயன்படுத்த முடியு மென்று கடலறிவியலாளர்கள் மெய்ப்பித்துள்ளனர். ஆயினும் அலையின் உயரத்தில் காணப்படும் நிலை யற்ற மாறுதல் அலை ஆற்றலை ஆக்கவழியில் பயன் படுத்தத் தடையாக உள்ளது. இந்தியாவின் கடற்கரையில், அலை ஆற்றலை ஆக்க ஆற்றலாகப் பயன்படுத்தும் முன்னோடி ஆய்வு தற்போது நடை பெற்று வருகிறது. வெப்ப ஆற்றல் (thermal energy). இப்புவியின் வெப்பச் சமநிலையைப் பாதுகாக்கப் பெரிதும் பெருங் கடல் பயன்படுகிறது. மிகுதியாக உள்ள வெப்பம் சுடல் மூலம் வடக்கும், தெற்கும் கொண்டு செல்லப் கடல் வளர்ச்சித் துறை 253 பட்டு. ஆழி நீரோட்டங்கள், காற்று. புயல்கள் மூலமும் பரப்பப்படும். கடலின் ஆழங்களில், வெவ் வேறு நீர்ப்பகுதிகளுக்கு ஏற்ப வெப்பநிலை மாறு படுகிறது. இந்த வெப்ப வேறுபாட்டிலிருந்து உற்பத்தியாகும் ஆற்றலை ஆக்கவழியில் பயன்படுத்த ன்றைய கடலியல் வழிகாட்டுகிறது. அடுத்த பத்தாண்டுக் காலத்தில், கடலின் வெப்ப ஆற்றல் மூலம், 400,000 கி.வா. மின்னாற்றலை உற்பத்தி செய்ய இயலுமெனக் கடலறிவியலார் கணக்கிட் டுள்ளனர். இந்தியாவில் இந்தியாவில் அந்தமான் - நிக்கோபார் தீவுகளிலும், கடலின் வெப்ப ஆற்றலிலிருந்து மின் னாற்றலை உற்பத்தி செய்யக் கடல்வளர்ச்சித்துறை முயன்று வருகிறது. அலைகடல் அளிக்கும் மருந்துகள் (medicines from the sea). கடல்வாழ் நுண்ணுயிர். கடல்பாசி கடல் காளான் முதலிய கடல் தாவர இன உயிரிகள் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொண்டுள்ளன. இவற் றுள், ஏறத்தாழ 5,00,000 வகைக் கடல்வாழ் உயிரி னங்கள் மருத்துவச் சிறப்பு வாய்ந்தவையாம். இவற் றிலிருந்து கிடைக்கும் மருந்துப்பொருள், நரம்பு மற்றும் இதய இரத்த ஓட்டத்தொடர்பான நோய்களைக் குணமாக்க வல்லதாகும். பாக்டீரியா எனும் கடல்வாழ் நுண்ணுயிர்களிலிருந்தும், கடற் காளான்களிலிருந்தும் கிடைக்கும் எல்- ஆஸ்பராஜி னேஸ் (L-asparaginase) எனும் பொருள் இரத்தப் புற்றுநோய்க்கு மருந்தாகும். பெனிசிலியம், ஸ்ட்ரெப் டோமைசிஸ் முதலிய கடற் காளான்களிலிருந்து பெனிசிலின், ஸ்ட்ரெப்டோமைசின் முதலிய நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வளர்ந்துவரும் சுடலியல் மற்றும் கடல்வாழ் உயிரியல் ஆய்வுகளின் விளைவாகத் தோன்றிய எதிரொலி ஆழமறி கருவி (echo-sounder). மின் மீன் பிடிப்பு முறை (electrical fishing) மூலம் மீன்பிடி தொழிலைப் புதுமைப்படுத்தி மேனாட்டார் பெரும் பயன் அடைந்து வருகின்றனர். ஆயினும், பெருமள வில் கடற்கரைப் பகுதியைக் (6000கி.மீ.) கொண் டுள்ள இந்தியா உலகின் மொத்த மீன் உற்பத்தியில் ஏறத்தாழ 2% அளவே உற்பத்தி செய்கிறது. அண் மையில் இந்திய ஆழ்கடல் கனிமவள ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது. இரா. நடராசன் கடல் வளர்ச்சித் துறை இந்தியாவில் ஒரு வளரும் அறிவியலாகக் கடலறி வியல் விளங்குகிறது. கடலறிவியலின் இன்றியமை யாபையை நன்குணர்ந்த இந்தியா, பல்வித வளங் களையும் பெற 1981 இல் இந்தியக் கடலறிவியல்