பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலலைகள்‌ 275

கடலலைகள் 275 கள் ஆகும். கடலடியில் நிகழும் பூகம்பங்களாலும், எரிமலை வெடிப்புகளாலும், மிக ஆழமான அகழி களில் தோன்றும் சரிவுகளாலும் இவ்வலைகள் உண்டாகின்றன. இவை வலிமையான புயற்காற்றால் உருவாகும் பேரலை போலவே பல மடங்கு ஆற்றல் பெற்றுக் கடலோரப் பகுதிகளைத் தாக்கி அழிக் கின்றன. எரிமலைகள் நிறைந்திருக்கும் ஜப்பான் நாட்டில் எழுந்த புவியதிர்ச்சி அலைகள் 1896இல் ஜப்பானியக் கடலோரப்பகுதியில் வசித்த ஏறத்தாழ 27,000 மக்களைக் கொன்றன. எதிர்பாராமல் சூழ்ந்துவிடும் இவ்வலைகளை ஜப்பானிய மொழியில் சுனாரிஸ் (Tsunamis) அதாவது துறைமுகத்தில் எழும் மிகப்பெரும் அலைகள் என்று பொருள்படும் படி வழங்குகின்றனர். புவியதிர்ச்சியின் விளைவாகக் கடல் அடித்தரைப் பரப்பின் ஒரு பகுதி விழும்போது, கடல் நீர் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாய்ந்து ஒன்று சேர்ந்து, உயரத்துடன் சீறி எழுகிறது. அலைகளும் அதன் காரணமாக நாலாபுறமும் நகர்ந்து ஓடுகின்றன. அவ்வாறே கடலின் அடித்தளம் அதிர்ந்து உயரும் போதும் நீர்ப்பரப்புப் புடைத்து மிக மிக நீண்ட அலைகள் உருவாகி உட்புறம் நகர்கின்றன. நிலச் சரிவுகளும் இவ்வித அலைகளை உருவாக்குகின்றன. இவ்வலைகள் குறிப்பிடத்தக்க நீளம் கொண்டவை. ஒரு நீண்ட அலையின் அடுத்தடுத்த முகடுகளின் இடைப்பட்ட தொலைவு நூற்றுக் கணக்கான கி.மீ. வரை நீண்டிருக்கும். அது தன் ஆற்றலில் மிகுதியான இழப்பை அடையாமல் ஏறக்குறைய 720 கி.மீ, வேகத்தில் பல்லாயிரக்கணக்கான கி. மீ. தொலைவை விரைவில் எட்டிவிடும் தன்மை கொண்டது. பெருங்கடலின் பரப்பில் மிக மிக ஆழமாக அமைந்துள்ள அகழிகளிலும் இவ்வித அலைகள் தோன்றுவதுண்டு. ஜப்பான், பெரு அலூஷியன் தீவுகளை அடுத்த கட ற்பரப்பின் அகழிகளில் தோன்றும் புவி அதிர்ச்சி அலைகள் மிசுக்கொடுமை யாகத் தாக்கும் தன்மை கொண்டவை எனக்குறிப் பிடப்படுகின்றன. 1955இல் விஸ்பனில் ஏற்பட்ட புவியதிர்ச்சி, 15 மீட்டருக்கும் உயரமான அலை களைத் தோற்றுவித்துக் கேடிஸ் (Cadiz) நகரையே மூழ்கடித்தது. புவியதிர்ச்சி ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின்னரும் அலைகள் பொங்கி எழுந்த வண்ணமிருந்தன. கரையிலிருந்து கடல் நீர் எதிர்பாராது பின் வாங்கிச் செல்வதே புவியதிர்ச்சி அலை வருவதற்கான முதல் அறிகுறியாகும். ஹவாய்க் கடற்கரையில் கடல் நீர் ஏறக்குறைய 150 மீட்டருக்குப் பின் வாங்கி, பின்னர் மிகு ஓசையுடன் அலைகள் பொங்கி யெழுந்தபோது, ஹவாய்த் தீவிலிருந்து ஏறத்தாழ 3200 கி.மீ. தொலைவிலுள்ள அலூஷியன் தீவில் புவியதிர்ச்சி ஏற்பட்டது. இயல்பான ஓத ஏற்றத்தை விட 7.5 மீ உயரமாகப் பெருங்கடல் நீர் கொந் அ.க.7-18 அ யுடன் 144. தளித்தது. இந்த அலைகள் மிகநீளம் கொண்டவை யாக, அலையின் ஒரு முடிக்கும் அடுத்த முடிக்கும் இடையே ஏறக்குறைய மீ. இடைவெளி இருந்துள்ளன. ஏறத்தாழ 3680 கி.மீ. தொலைவிலுள்ள ஹவாய்த்தீவின் ஒரு பகுதியை அடைவதற்கு அந்த அலைகளுக்கு ஐந்து மணி நேரம் பிடிக்கவில்லை. கிழக்குப் பசிபிக் சுரையில் கூடப் எழுந்த புவியதிர்ச்சி அலைகள் பரைஸோ நகரம் சிலியிலுள்ள ஏறக்குறைய வால் 13536 கி,மீ. சிட்னி தொலைவில் இருந்தும் கூட அங்கும் உணரப்பட்டன. மணிக்கு சுமார் 750 கி. மீ. வேகத்தில் பயணம் 18 மணி நேரத்தில் அக் செய்த இப்பேரலைகள் கரையைத் தாக்கின. இவ்வாறே தென் சிலி நாட்டில் கொந்தளித்து எழுந்த புவியதிர்ச்சியலைகள் பசிபிக் கடலைக்கடந்து நியூகினியா, ஜப்பான். போன்ற நாடுகளின் கடற்கரையோரங்களை மோதித் தாக்குவதையும் கின்றனர். மிகவும் ஆற்றலுடன் நீண்ட புவியதிர்ச்சி அலைகள் நீர்மட்டத்தை மிகப்பெரும் அளவிற்கு உயர்த்துவதுடன், ஏறத்தாழ முப்பத்திரண்டரை இவ்வுலகத்தின் பாதிப்பகுதியை வலம் வந்ததற்குச் சமமான தொலைவைக் வந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

மணி நேரத்தில், கடலாய்வாளர்கள் குறிப்பிடு கடந்து அழிக்கும் அலைகள் இவ்வாறு எதிர்பாராமல் கடலோரங்களைத் தாக்குவதால், அலைகளைக்கணக் கிட்டு அறிய உதவும் பலவிதச் சிறப்புக் கருவிகளைக் (wave recorder) ஒத நிலையங்கள் (tidal centres) பசிபிக் கடலோர நாடுகளில் நிறுவியுள்ளன. பெருங்கடலின் கீழ் உண்டாகும் புவியதிர்ச்சிகளை யும், அவற்றால் கொந்தளித்து உருவாகக்கூடியா பேரலைகள் எந்தெந்த இடங்களுக்கு அழிவை உண்டாக்கக் கூடும் என்பதையும், எந்த நேரத்தில் எந்த முறையில் அவ்வலைகள் கரைகளைத் தாக்கும் என்பதையும் காட்டும் எச்சரிக்கைகளை அளிக்கும் அளவிற்கு இன்று புதுமையான கருவி களையும் பாதுகாப்புக் கருவிககளையும் கடலாராய்ச்சி யாளர்கள் கண்டறிந்து நிறுவியுள்ளனர் அக அலைகள். கடல் மட்டத்தில் காணும் அலைகள் நீருக்கும் காற்றுக்கும் இடையே அமைந்த எல்லையில் தோன்றுகின்றன. ஆனால் மிகப்பெரிய வியப்பூட்டும் அக அலைகள் கடலாழத்தில் கண்ணுக்குப் புலப்படாமல் தம் மறைமுகமான பாதை களில் வ்வகை உருண்டோடிக் கொண்டுள்ளன. அக அலைகள் மாறுபட்ட நீர் அடுக்குகள் (மாறு பட்ட அடர்த்தி) கொண்ட எல்லைகள் இருக்கும் இடங்களில் தோன்றுகின்றன. கடலில் செல்லும் கப்பல்களைக் கடலலைகள் அலைக்கழிப்பதைப் போல ஆழ்கடலில் அசுஅலைகள் நீர் மூழ்கிக் கப்பல் களை அலைக்கழிக்கின்றன. ஆர்டிக் பெருங்கடலைப் பற்றிய ஆராய்ச்சிக்குச் செல்லும் கப்பல்கள் இறந்த நீர் (dead water) எனப்படும் கடல் பகுதியில் அகப்