கடுக்காய் (சித்தமருத்துவம்) 317
சவ்வுக்கடுக்காய் என்றும், மேலும் சிறிது பெருத்துத் திராட்சையைப் போலிருப்பதற்கு ஐங்கிக் கடுக்காய், இந்துக் கடுக்காய், கறுப்புக் கடுக்காய் என்றும் பெயர். இவ்வகைகளில் விதைகள் இல்லை. இவற்றிலும் பெரியதாக நன்றாக முதிர்ந்து மஞ்சள் கலந்த பச்சை வண்ணமாயிருப்பது சீனக் கடுக்காய் என்றும், மேலும் முதிர்ந்து அரைப்பகுதி பழுத்து மஞ்சள் வண்ணமா யிருப்பது மஞ்சட் கடுக்காய் என்றும் பெயர் பெறும். முழுதும் நன்றாகப் பழுத்துச் சிவந்த வண்ணமா யிருப்பது காபூலி அல்லது சீமைக் கடுக்காய் எனப் படும். இவ்வகைக் கடுக்காயே சிறந்தது. காபுவிக் கடுக்காய், சீமைக் கடுக்காய், சீனக் கடுக்காய் என்பவை அந்தந்த நாடுகளில் விளைந் தவை அல்ல. இவை இந்திய நாட்டில் விளைகின்றன. முன்கூறிய வகைகள் ஒரு காலத்தில் காபூல் நாட்டின் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டமையால் காபூலிக் கடுக்காய் என்றும், கப்பல் பவை மூலமாகக் காண் செல்லப்பட்டமையால் சீனக் கடுக்காய், சீமைக் கடுக்காயென்றும் பெயர் பெற்றன. அக் காலத்தில் கப்பல் மூலமாகக்கொண்டு போகப்படு அல்லது சீமைச் சரக் அனைத்தும் சீனா கெனவே பெயர் பெறும். அவ்வாறே இதற்கும் சீனா அல்லது சீமைக் கடுக்காய் என்று பெயர் வந்திருக் கலாம். கடுக்காயில் பல இனங்களிருந்தபோதும், பண்புகளில் பெருத்த வேறுபாடில்லை. இரண்டு கடுக்காயைக் கொட்டை நீக்கித் தூள் செய்து 200 மில்லி நீரில் கொதிக்கக் காய்ச்சி வடி கட்டி. இருவேளை கொடுக்க அளவுக்கு மீறிய நீர் போவதும், கண் நோய்களும் குறையும். கடுக்காய்த் தூளையும், காசுக்கட்டித் தூளையும் சமமாகச் சேர்த்து வெண்ணெயில் கலந்து நாக்கில் தடவிவரப் புண் நலமாகும். கடுக்காய்த் தூளை வெளிமூலம் தள்ளும்போது அதன் மேலே தடவி வந்தால் அது சுருங்கி உள்ளே போகும். மூலத்தில் இரத்தம் வரும்போது கடுக்காயை நீரில் கொதிக்க வைத்து, கழிவாயில் கழுவி வர இரத்த மூலம் நிற்கும். கடுக்காயைக் கொட்டை நீக்கித் தேவையான அளவு எடுத்து, அத்துடன் இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, புளி, உப்பு இவற்றை அளவாகச் சேர்த்து நெய்யில் வதக்கித்துவையல் செய்து சாப் பிட்டு வந்தால் நன்கு பசி எடுத்து, குமட்டலைப் போக்கி மலத்தைத் தள்ளி உடலுக்கு வலிமை தரும். கடுக்காய்த் தூள், சுக்கு. திப்பிலி, தேன், வெல்லம் இவற்றைச் சம பகுதியாகச் சேர்த்து இலேகிய பதமாகக் கிளறி வைத்துக் கொண்டு காலை, மாலை, சுண்டைக்காயளவு சாப்பிட்டு வர, வாத, பித்த, கப மிகுதியால் வரும் எந்த நோயும் தொடக்கத்திலேயே நலமாகிவிடும். கடுக்காயை நன்கு உலர்த்தி இடித்துக் கொட்டை நீக்கித் தூள் கடுக்காய் (சித்த மருத்துவம்) 317 கொண்டு செய்து துணியில் வடிகட்டி வைத்துக் மூக்கில் இரத்தம் கொட்டும்போது ஒரு சிட்டிகை எடுத்துப் போட்டு வர இரத்தம் வருவது நிற்கும். பச்சைக் கடுக்காயை உரலில் இடித்து ஒரு நெல்லிக் காய் அளவு வாயிலிட்டுப் பால் குடிக்கக் கபத்தால் வரும் ஈளை இருமல், சீதக்கடுப்பு, புகையிருமல் ஆகியன நீங்கும். கடுக்காய்த்தோல், கிராம்பு வகைக்கு 15 கிராம் எடுத்து இடித்துச் சிதைத்து 200 மில்லி நீர் விட்டு மண்சட்டியில் 10 நிமிடம் காய்ச்சி வடிகட்டிக் காலையில் 1 குவளை குடித்துவிட வாந்தி, குமட்டல், வயிற்றுக் கடுப்பு ஆகியவை இல்லாமல் 4 முறை நன்றாகப் பேதி ஆகி உடல் வலிமை பெறும். சிறுவர் களுக்குப் பாதிக்குவளையும், குழந்தைகளுக்கு வய திற்கு ஏற்றவாறு 1 முதல் 2 சங்கு அளவிலும் கொடுக்கலாம். கடுக்காய் இலை, வேர்,காய், பூ, பிஞ்சு, மரப் பட்டை வேர்ப்பட்டை ஆகியவற்றைச் சேர்த்து வெயிலில் உலர்த்தி, இடித்து, மெல்லிய ணியில் து சலித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி, வீதம் காலை, மாலை பசும்பாலில் கலந்து குடிக்க கரு மேகப்படை, செம்மேகம், குஷ்டம், வெண்குஷ்டம். கிரந்தி, சிவ்விடம், வண்டுகடி ஆகியவை நீங்கும். நோய்க்கு ஏற்றவாறு 1 மண்டலம், 2 மண்டலம் உட்கொண்டு புகை, பொடி. காரம், புளி, போகம் இவற்றை நீக்கி,சாந்தமான உணவுகளை உட்கொள்வ தால் மேற்கூறிய நோய் அனைத்தும் நீங்கும். கடுக்காயைக் கொட்டை நீக்கி நாளும் காலை மட்டும் ஓராண்டு சாப்பிட்டு வர நரை மாறும். கடுக்காய், எருக்கம் வேர், நேர்வாளக்கொட்டை நாபிக்கிழங்கு, சுக்கு, மூசாம்பரம் இவற்றை வகைக் குச் சமபகுதி எடுத்து, பழுப்பு உருக்கிலைச் சாற்றில் அரைத்து வைத்துக்கொண்டு ஆறாத காயங்கள், ராஜபிளவை, புற்றுக் காயங்கள், கட்டிகள், அரை யாப்பு முதலியவற்றின் மேல் தடவிவர அவை எளிதில் ஆறிவிடும். . நல்ல தேர்ந்த கடுக்காய்களைக் கற்கண்டு பாகில் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு அதில் ஒன்று எடுத்து மாலையில் வாயிலிட்டுச் சுவைத்துச் சாப் பிட்டுக் கொட்டையை வெளியே துப்பிவிடவேண்டும். இவ்வாறு 20,40,60,120 நாள் தொடர்ந்து சாப் பிட்டால் குமட்டல், பசியின்மை, இரைப்பைப் பித்தம், வயிற்றுப்புண், சுவாசகாசம், வயிற்று வலி, சூலை, இருமல், மூலம், வாதநோய், பேதி, பாண்டு சோகை ஆகியவை முற்றும் நீங்கும். கடுக்காயைத் தவையான அளவு தட்டி, ஒன்றிரண்டாக இடித்து, மெல்லிய துணியில் முடிந்து, ஒரு மண் ஜாடியில் போட்டு அதில் ஆமணக்கெண்ணெயை விட்டு வெயி லில் 10 நாள் வைத்து, எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு கண் அமரம் வந்த குழந்தைகளுக்குக் கண் களில் விட்டு வர 10 நாளில் அந்நோய் நீங்கும்.