பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 கத்தரி

428 கத்தரி கத்தரி கத்தரிச்செடி. சோலனேசி என்னும் இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. கத்தரிச் செடியின் தாவர வியல் பெயர் சொலானம் மெலான்ஜினா (Salanum Malangena) என்பதாகும். இது, பல்லாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற இனமாகும். இதன் உலக உற்பத்தி 2,50,000 டன்னாகும். முக்கிய உற்பத்தி நாடுகள் ஜப்பான், துருக்கி, இத்தாலி, எகிப்து, ஈராக் ஆகும். இந்தியர்கள் இதை இன்றி யமையாக் கறியாகப் பயன்படுத்துகின்றனர். கத்தரி குப் பல ஐரோப்பிய வட்டாரப் பெயர்கள் உள்ளன. அவற்றில் சில ஒபர்ஜைன் (oubergine) முட்டைச் செடி, மெலான்ஜீன் (malangene) என்பன. தோற்றம். தற்போது பயிரிடப்படும் கத்தரியின் முன்னோடி இனத்தை அறிவது சற்றுக் கடினம். அயல் மகரந்தச் சேர்க்கை, கலப்பு வீரியத் தேர்வு முதலியவற்றால் பலவகையான கத்தரி இனங்கள் தோன்றியிருக்கக்கூடும். சொலானம் என்ற இனம் தான் மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளைத் தாயக மாகக் கொண்டது என்றாலும் கத்தரி, இந்தியாவில் தோன்றியிருக்கக்கூடும் என்பது ரஷ்ய அறிவியலார் வாவிலல் என்பாரின் கருத்து ஆகும். ஏனெனில் காட்டுக் கத்தரியினங்கள் இங்கேதான் காணப்படுகின்றன. மேலும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இது சீனா சென்றிருக்கக் கூடும். பர்க்ஸ்க்ளவ் கருத்துப்படி இந்தியாவில்தான் முதலில் கத்தரி பயிரிடுதல் வழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மேலும் அரேபியர்கள் மூலம் கத்தரி, ஸ்பெயின், பாரசீசும், ஆப்பிரிக்கா முதலிய இடங் களுக்குப் போயிருக்கக்கூடும். பிறகு போர்ச்சுகீசியர் கள் மூலமாகத் தென் அமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. வகைப்பாடு. தாவரவியல் அடிப்படையில் கத்தரியை நான்கு வகையாகப் பிரித்துள்ளனர். சோ. மெ. வகை இன்கேனம் (S.m:Var incanum) என்பது நடுத்தர உயரம் உடையது, முள்ளுடையது, பல் பருவச்செடியாகும். காய்கள் மஞ்சள் நிறம்; முட்டை அல்லது கோள வடிவமானவை, கசப் பானவை, உண்ணத்தக்கவையல்ல. சோ.மெ வகை மெலான்ஜினா (S.m Var. melangenu) என்பது கத்தரிச் செடியாகும். காய் பெரியதாக, முட்டை அல்லது கோள வடிவத்தோடு தொங்கக்கூடியது. 5-30 செ.மீ. நீளம் இருக்கும். பளபளப்பாக, வெண்மை. மஞ்சள், ஊதா அல்லது வண்ண வரிகளுடன் காணப் படும். சோ.மெ. வார் டிப்ரெசம் (S.m.Vardepressum) என்பது குட்டைக் கத்தரி என்றும் குறிப்பிடப்படும். இது சிறிய படரக்கூடிய செடியாகும். காய்கள் முட்டை அல்லது பேரிக்காய் வடிவம் உடையவை. 10-12 செ.மீ. நீளமுடையவை. சோ.மெ.வார் சர்பன்டைனம் (S.m. Var. serpentinum) என்னும் வகையின் காய்கள் மிகவும் நீளமானவை. 30 செ.மீ. வரை வளரும். நுனி சற்று வளைந்திருக்கும். முதல் வகை தவிர ஏனைய மூன்று வகைகளும் உண்ணத் தக்கவை. வணிக முறையில் கத்தரியை நிறம், உருவம் இவற்றின் அடிப்படையில் பிரித்துள்ளனர். வட்டார மக்களின் விருப்பத்துக்கேற்றவாறு இந்த வகை பெருமளவில் பயிரிடப்படும். வட இந்தியர்கள் வெளிர் ஊதாக் கத்தரியையும் பீகாரியர், கன்னடியர் நீள், பச்சை வகைகளையும், ஓரியர் வட்டப் பச்சை களையும் விரும்புகின்றனர். பொதுவாக மஞ்சள், பழுப்பு, வெண்மை வகைகளை விரும்புவதில்லை. காசியில் பயிராகும் 'காசி பெரியது' வதக்கி உண்ணத்தக்கது. கல்கத்தா பகுதிக் காய் நீள் - பச்சை வகையில் சிறிய சுரைக்காய்போல் காணப்படும். மைசூர்ப் பச்சை கொத்தாகக் காய்க்கும். தமிழ் நாட்டுக் குடியாத்தம் S.H.68 வயநாடு பெரியது' 'பூசா ஊதாக்கொத்து' முதலியவை மிகவும் சிறந்த வகைகளாகும். வ வளரியல்பு. கத்தரி பல்பருவ இனமாக இருந் தாலும் பயன் கருதி ஒரு பருவச் செடியாகவே பயிரிடப்படுகிறது. தண்டு வலிமையற்றது; ஆனால் முதிர்ந்த தண்டு கட்டைபோல் காணப்படலாம். சில சமயம் முள்கள் காணப்படும். செடியின் அனைத்துப் பகுதிகளிலும் தூவிகளும் நீண்ட ஆணிவேர்களும் உண்டு. இலைகள் முழுமையானவை, மாற்றிலை யடுக்குடையவை, இலைக்காம்பு நீண்டது. இலைப் பரப்பு முட்டை வடிவம் அல்லது தய வடிவம் கொண்டது. மலர்கள். தனித்தவை அல்லது 2-5 மலர்கள் சேர்ந்து சைம் மஞ்சரியில் காணப்படும். மலர் இலைக் கெதிராக அல்லது கோணத்திற்கு வெளியில் காணப் படும். மலர்கள் ஒழுங்கானவை, இருபாலானவை 2 செ.மீ. குறுக்களவுள்ளவை. பூக்காம்பு 1-3 செ.மீ. நீளம் இருக்கும். மேற்கொண்டும் நீளக்கூடியது. ப புல்லிவட்டம். 5 இதழ்கள் இணைந்தது, நிலைத் தது. முள்களோடு கூடியது, கனியில் சற்றுப் பெருத்துச் சதைப்பற்றாகக் காணப்படும். அல்லிவட்டம். 5 இதழ்கள் இணைந்தவை. மகரந்தக்காம்புகள் சிறியவை. மகரந்தப் பைகள் நீண்டு, ஒவ்வொன்றின் நுனியிலும் இரு துளைகள் காணப்படும். பல சூலகம். இதில் சூலிலைகள் 2, சூல்கள் அவை, அச்சொட்டுமுறையில் அமைந்தவை. சூலகத் தண்டு ஒன்று. இது மகரந்தத் தாள்களுக்கு மேலே நீட்டிக்கொண்டிருக்கும். சூலகமுடி தலைபோன்று பருத்துக் (capitate) காணப்படும். . காய். சதைப்பற்றுள்ள (berry) வகையைச் சேர்ந்தது. தொங்கிய நிலையில் பளபளப்பாகப் பல