பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{rh}578 கரடி}}

578 கரடி களின் முனையில் உள்ள கொம்புகள் 20 செ.மீ க்கு மேல் வளர்வதில்லை: எலும்புக் காம்புகளை மயிரு டைய தோல் மூடியிருக்கும். எலும்புப் புடைப்புகள் முகத்தின் பக்கங்களில் V வடிவத்தில் இரண்டு வரம்பு போன்ற முகடுகளாக அமைந்துள்ளன. இதனால் இவை பழுவெலும்பு முக மான்கள் (rib faced deer) எனப்படுகின்றன. மேல் தாடையிலுள்ள கோரைப்பற்கள் கீழ்த்தாடை' உதடு வரை நீண்டு வளர்ந்துள்ளன. அடர்ந்த புதர்களும் செழித்த காடுகளுமுள்ள இமயமலைப்பகுதியிலும், தென் இந்தியாவில் 5000- 6000 அடி உயரத்திலும் இவை வாழ்கின்றன. இலை யும் காயும் இவற்றின் முக்கிய உணவாகும். ஒட்டைச் சிவிங்கியைப்போல் இனவ தம் நீண்ட நாக்கால் கிளைகளை ஒடித்தும் புதர்களிலிருந்து தழைகளை வளைத்தும் உண்கின்றன. சிறு கூட்டமாக உலவும் வை வேகமாக ஓடக்கூடியவை. சண்டை போடும் போது கொம்புகளைவிடக் கோரைப் பற்களையே (canines) மிகுதியாகப் பயன்படுத்துகின்றன. கலவிக்கு ஆறுமாதங்களுக்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனும். ஈன்ற குட்டிகளைத் தாய் தன் நீண்ட நாக்கினால் நக்கித் தூய்மை செய்யும். முன்டியாகஸ் பேரினத்தில் நன்கு பிரித்தறியக் மூன்று இனங்கள் உள்ளன. அவை, வட இந்தியக் கரட்டாடு(Muntiacus mntiak vaginalis). சீனக்கரட்டாடு (M.m.reevasi), ஜாவா கரட்டாடு (M.m. munljak) ஆகியவை ஆகும். கர்டி கே. கே. அருணாசலம் பெரிய தலை, சிறிய கண்கள், வட்டமான காதுக் துகள், சிறிய வால், அகன்ற சிறிய பாதங்கள், வளைந்து உள்ளிழுத்துக் கொள்ள முடியாத கூர் நகங்கள் ஆகிய புற உறுப்புகளைப் பெற்றுள்ள கரடிகளின் அடர்ந்த மயிர் தாறுமாறாக வளர்ந்திருக்கும். செங்குத்தான மலை உச்சிகளிலும், பனி நிலத்திலும் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளையும் பருவ காலங் களுக்கேற்ற உணவுப் பழக்கங்களையும் பற்களின் அமைப்பையும் பெற்றுள்ளன. தேனையும், கறையான்களையும் விரும்பி உண் ணும் இவை கறையான்களை உண்ணும்போது மண்ணோ, தூசியோ மூக்கிற்குள் புகாதவாறு மேலு தட்டால் மூக்கை மூடிக் கொள்கின்றன. பகலில் குகை போன்ற மறைவிடங்களில் தங்குகின்றன. கடுங்குளிரைத் தாங்க முடியாமல் குளிர்காலத் ஓடுக்கத்தை மேற்கொள்கின்றன. தனித்தே வாழ் கின்ற கரடிகள் உடலுறவுக் காலத்தில் இணையுடன் சேர்ந்தே திரிகின்றன. அவற்றின் பேறுகாலம் ஏழு மாதங்களென்றும், இரண்டு அல்லது மூன்று குட்டி களை ஈன்று அவை மூன்றாண்டுகள் நிறைவெய்தும் வரையோ அதற்கு மேலோ தாய்க் கரடியால் பேணப் படுகின்றன என்றும் வன விலங்கியலறிஞர் கூறு கின்றனர். கால்நடைகளுக்கும், விளை நிலங்களுக்கும் கேடு விளைவித்தும், உணவு கிடைக்காதபோது இறந்த விலங்குகளை உண்டும் வாழ்கின்றன. மனிதனிட மிருந்து விலகியே வாழும் இவை சில சமயங்களில் மனிதனையே தாக்குகின்றன. நாய்களும், கரடி களும் நெருங்கிய தொடர்புடைய விலங்குகளென்றும் அவை இரண்டும் ஒரே மூதாதையிடமிருந்து தோன்றி யவையென்றும் புதை படிவச் சான்றுகள் தெரிவிக் கின்றன. வெவ்வேறு விதமான பழக்கவழக்கங்களை மேற்கொண்டு நாய்க் குடும்பமென்றும், கரடிக் குடும்பமென்றும் பிரிந்தன. இரையை விரைவாகவும், விடாமுயற்சியுடனும் துரத்திப் பிடிப்பதற்கேற்ற வாறு மெலிந்த கால்களையும், சிறிய நகங்களை யுடைய பாதங்களையும் நாய்க்குடும்பம் தகவமைப்பு களாகப் பெற்றது. அனைத்து வகை உணவை உண்பதற்கும், மரங்களில் ஏறுவதற்கும், புவியைத் தோண்டுவதற்கும், மலைச் சிகரங்களில் செல்வதற்கும் ஏற்ற தகவமைப்புகளைக் குடும்பம் பெற்றது. ஏறிச் கரடிக் நுகர்ச்சியின் மூலமே உணவைத் தேடிப் பெறுவ தால் நுகர்ச்சிப் புலனே சிறப்பாக அமைந்துள்ளது. செங்கரடி 2 கி.மீ தொலைவில் வரும் மனிதனைத் தன் நுகர்ச்சிப் புலுனால் தெரிந்து கொள்கிறது. பனிக் கரடியின் நுகர்ச்சிப் புவன் சிறப்பாக அமையவில்லை. இமயமலைக் கரடியின் பார்க்கும். கேட்குந்திறன்கள் பிற இருவகைக் கரடிகளையும்விடச் சற்று முன் னேற்றமடைந்துள்ளன. செவி கரடிகளின் பார்வையும், கேட்கும் தன்மையும் சிறப்பாக இல்லை. செவிப்பறைக்குள்ளிருக்கும் முட்டை வடிவச் எலும்பு தட்டையாக அழுத்தப்பட்டுள்ளதால் கரடிகளின் கேட்கும் ஆற்றல் சிறப்பாக இல்லை. செவிப்புலன் சிறப்பாக அமைந் துள்ள பிற விலங்கினங்களின் செவி எலும்பு தட்டை யாக இல்லாமல் பருத்திருக்கும். அவற்றின் கண் களும் மிகச் சிறியவை. எனவே, அவை தெளிவாகப் பொருள்களைப் பார்க்க முடிவதில்லை. எதையாவது ஒன்றை உற்றுப் பார்க்க முற்படும்போது நேராக நின்றே பார்க்கின்றன. இரையைப் பற்றி உண்ணும் விலங்குகளின் முக மீசை மயிர், தொடுபுலன் உறுப்பாகப் பயன்படுகிறது. ஆனால் ஓரளவு வளர்ந்துள்ள கரடியின் முகமீசை அப்பணியைச் செய்யாததால் பயனற்ற உறுப்பாகிறது. உணவுக்காக நீண்ட தொலைவு நடந்து செல்கின்றன. அவற்றின் பாதச் சுவடுகள் மனிதனின் பாதச் சுவடு