836 கழற்சிக்கொடி (சித்த மருத்துவம்)
836 கழற்சிக்கொடி (சித்த மருத்துவம்) வலிமை தரும். காய்ச்சலைப் போக்கும். வீக்கத்திற்குப் பற்றாகப் போடலாம். காயில் பாண்டுசின் என்னும் சுசப்புப் பொருள் உள்ளது. பருப்பில் 20-24 % எண்ணெய் மாவுப்பொருள் சுக்ரோஸ், சைட்டோஸ் டீரால் இரண்டு வகையான தாவர ஸ்டீரால்கள் உள்ளன. கழற்சி எண்ணெய் இள மஞ்சள் நிறமாகவும் கெடு மணம் கொண்டதாகவும் இருக்கும். பருப் பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வீக்கத் திற்கும் தோலை மென்மையாக்கவும் முகத்தில் தோன்றும் மரு, புள்ளிகள், தேமல் போன்ற நோய் களை நீக்கவும் பயன்படுத்தலாம். இது காதில் சீழ் வடிதலையும் நலமாக்கும். இவ்விதைப் பருப்பை இடித்து விலா வீக்கம், அண்டவாயு முதலியவற்றிற்கு அரைத்துப் பூசலாம். விளக்கெண்ணெயில் கலந்து உள்ளுக்குக் கொடுக்கப் பேதியுண்டாகி வாயுவைப் போக்கும். இப்பருப்பைப் பொடித்து அதே எடை மிளகுத் தூளுடன் சேர்த்து வாதக்காய்ச்சல் (rheumatic fever) முறைக் காய்ச்சல் (intermittent fever) முதலியவற்றிற்குத் தரலாம். பருப்புத்தூளைக் கோழிமுட்டையில் கலந்து பொரித் துத் தர அண்டவாதம் (orchitis), கருப்பை வலி (ovaritis), கண்டமாலை (icrofula) ஆகியவை நீங்கும். கொட்டையைச் சுட்டுப் பொசுக்கி அத் துடன் வெண்காரமும், வறுத்த கொட்டைப்பாக்கும் சேர்த்துப் பல் துலக்க, ஈறுநோய் (spongy gum). பல்லரணை (gum boil) முதலிய நோய்கள் தீரும். இவ்விதையை விளக்கெண்ணெயில் கூட்டி எரித்து வடித்த தைலத்தை ஓதம் (hydrocele), விரைவாய் orchitis) வுக்குப் (acute இரத்தப்போக்கை நிறுத்தித் தொற்று நோய்களை விலக்கும். நோய்களைப் போக்கும். இலையுடன் தேங்காய்ப்பூ சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்ட வாத நோய். குடல் வாயு, விரைவீக்கம், விரை வாயு குணமாகும். வீக்கமும் கரையும். சூதகச் சிக்கலையும் போக்கும். கழற்சிக்கொடி வேரைப் பொடித்துத் (325-500 மி.) தேனில் சேர்த்து உண்ணக் காய்ச்சல் நீங்கும். கோ. அர்ச்சுனன் கழற்சிக்கொடி (சித்த மருத்துவம்) கழற்சி இலையுடன் தேங்காய்ப்பூச் சேர்த்து விளக் கெண்ணெய் விட்டு வதக்கி, வீக்கங்களில் வைத்துக் கட்ட, வீக்கங்கள் கரையும். விரை வீக்கம் மறையும். கழற்சிப் பருப்பு, சுக்கு, களிப்பாக்கு இவற்றை முறையே மூன்று, இரண்டு, ஒன்று எடையில் எடுத்து முட்டையின் வெள்ளையை விட்டு, கருப்புக் கருங் கல்வில் மைபோல அரைத்துப் பற்றிடுவதால், யானைக்கால் நோயில் வரும் விரை வீக்கம், நீர் கோத்துவரும் விரை வீக்கம் முதலியன கரைவதைக் காணலாம். இதன் பருப்பு, வெள்ளுள்ளி, முருங்கைப்பட்டை, வசம்பு, சுக்கு முதலியவற்றை நீர்விட்டு எட்டில் ஒன்றாக வற்றச்செய்து பயன்படுத்த குடல் வாதம். சூலை, குன்மம் முதலிய நோய்கள் போகும். சுழற்சிப் மாவிளங்கம் பருப்பு, சித்திர மூலவேரின் பட்டை பூசலாம். இத்தைலம் விதை. வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். தொழுநோய்க்குப் பருப்பை உள்ளுக்குத் தரலாம். நச்சுக்காய்ச்சலைப் போக்கும். கழற்சிக்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பு மூன்று பங்கு, சுக்கு பங்கு எடுத்து இரண்டு பங்கு, களிப்பாக்கு ஒரு முட்டை பயன்படுத்தி டயின் வெள்ளைப்பகுதியைப் மைபோல் கரைத்துப் பற்றிட யானைக்கால் நோயில் வரும் விரை வீக்கம், நீர் கோத்து வரும் விரை வீக்கம் முதலியவை கரைந்து நலமாகும். கழற்சிக்காய்ப் பருப்பு, பூண்டு, வசம்பு, சுக்கு, முருங்கைப்பட்டை ஆகியவற்றில் நீர்சேர்த்து எட்டில் ஒரு பங்காக வற்றச் செய்து பயன்படுத்தத் குடல் வாதம், குன்மம், சூலை முதலிய நோய்கள் போகும். விதையைப் பொடித்துப் பெருங்காயம் சிறிது சேர்த்து மோரில் கலக்கி அருந்த குன்மம் போகும். உடலிற்கு வலிமை கிட்டும். கழற்சிக்கொடியின் கொழுந்து ஈரல் நோய்களை அகற்றும்; சூதகச் சிக்கலைப் போக்கும்: சிறுநீர்த்தாரை யைத் தூய்மைப்படுத்தும். இலையிலிருந்து பிழிந்த எண்ணெய்க் கசிவு. வாதம் போன்ற நரம்பு சார்ந்த வேர்ப்பட்டை வகைக்கு 35 கிராம் எடுத்து இடித்துப் பொடித்து அண்ட வெள்ளைக் கருவால் கிளறிக் கழற்சிக் காயளவு கொடுக்க அண்ட வாயு தீரும். கழற்சிப்பருப்பு, சத்தி சாரணைக்கிழங்கு, மிளகு. இந்துப்பு, பெருங்காயம், வெள்ளுள்ளி, வசம்பு இவற்றை ஒரு நிறையாயிடித்து வெள்ளாட்டுப் பாலிலரைத்துக் கொடுத்து வர அண்ட வாயு தீரும். விதை அல்லது வேர்ப்பட்டைத்தூள் 650 மி.கி. அளவு 12 - 975 மி.கி. வரை கொடுக்கக் காய்ச்சல் தணியும். இதன் விதையின் முளையை எடுத்துப் போட்டு நெய்யில் பொன்னிறமாக வறுத்துச் சுண்டைக்காய் உருண்டைகள் செய்து அந்தி, சந்தி 6 நாள் கொடுக்க சகலமூலமும் சுருங்கி வாடிப்போகும். விதையைப் பொடித்து, அவ்வெடை மிளகுத் தூள் சேர்த்து அதில் 650 மி.கி. 6.630 கிராம் வரை கொடுக்கக் காய்ச்சல் தணியும். இதன் விதையைப் பொடித்துப் பெருங்காயம் சிறிது சேர்த்து மோரில் கலக்கி அருந்த குன்மநோய் போகும். உடல் வலிமை தரும். விதையைச் சுட்டுப் பொடித்து, அதோடு வறுத்த பாக்குத்தூள் எடையும், சிறிது வெங்காரமும் சேர்த்துப் பல் துலக்கி சம