பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


கன்னி ஆரையின் ஒளியினில்
        கண்வழுக்(கு) உறுதல்
உன்னி நாடோறும் விலங்கினன்
        போதவை உணரார்.”39[1]

(முனியும் - கோபிக்கும்; கதிர் - பகலவன் ஆரை - மதில்; விலங்கினன் - விலகிச் சென்றான்)

வானநூற்படி கதிரவன் மகர ரேகைக்குத் (Capricorn) தெற்கேயும் கடக ரேகைக்கு (Cancer) வடக்கேயும் நகர்வதில்லை என்பது வானநூல் மெய்ம்மையாகும். இலங்கை மகர ரேகைக்குத் தெற்கே உள்ளது என்பதை நாம் அறிவோம். “மூவுலகையும் ஆண்ட இராவணனது சினத்திற்கு ஆளாக வேண்டும் என்று எண்ணிக் கதிரவன் இலங்கைமேல் வானத்தே சென்று, தனது வெப்பக் கதிர்களை வீசுவதற்கு அஞ்சி என்று மக்கள் நீண்ட காலமாய்ச் சொல்லிவருகின்றனர். இது தவறு; ஆராய்ச்சி இல்லாத கூற்று. இலங்கைமாநகரின் பொன்மயமான மதிலினது ஒளியினால் சூரியனது தேரிலுள்ள குதிரைகளின் கண் கூசுதல்பற்றியே இவ்வாறு விலகிச் செல்லுகின்றான் என்பதுதான் உண்மை” என்று கற்பனைநயம் தோன்றக் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. ஒளியினால் கண் கூசிப் பார்வை மழுங்குதல் இயல்பு. இரவு நேரங்களில் நாம் சாலையில் நடையாடும்போது மோட்டார் வாகனங்களின் கண் கூசும் பேரொளி விளக்குகளின் ஒளியை அநுபவித்திருக்கின்றோம். காவல் துறையும் இவ்வித விளக்குகளைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளதல்லவா?

பிறிதொரு கோணத்தில் : பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் அண்டங்களின் படைப்பையும், அவற்றின் அமைப்பையும், அவை விண்வெளியில் சுழலும் அற்புதத்தையும் இன்னொரு கோணத்தில் காண்கின்றார், ஒரு பாடலில். இவர் வைணவர். அரங்கநகர் அப்பன்மீது ‘திருவரங்கத்துமாலை’ என்ற ஓர் அற்புதமான பிரபந்தத்தைப் பாடியுள்ளார்: இஃது. ‘அஷ்டப்பிரபந்தம்’ என்ற எட்டுப் பிரபந்தங்களைக்கொண்ட தொகுப்பு நூலுள் ஒன்று.


  1. 39. கம்பரா - சுந்தர. ஊர்தேடு - 21