பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134



எங்கு நிறுவப்பட்டது?

இந்தியாவில் தாராபூர் என்னுமிடத்தில் 1963இல் நிறுவப்பட்டது.

90. முதல் அணுக்கருவி அமைப்பு இந்தியாவில் எங்கு, எப்பொழுது வெடிக்கப்பட்டது?

1974 மே 18இல் ராஜாஸ்தானில் பொக்கரான் என்னுமிடத்தில் வெடிக்கப்பட்டது. இதற்குக் காரண மானவர் ராஜராமண்ணா.

91. இதைத் தொடர்ந்து வெடிக்கப்பட்ட மற்ற அணுக்கருவி அமைப்புகள் யாவை?

1988 மே-இல் பொக்கரானில் ஐந்து அணுக்கருவி அமைப்புகள் வெடிக்கப்பட்டன.

92. டாக்டர் பாபாவுக்கு அடுத்ததாக உள்ள இரு இந்திய அணு விஞ்ஞானிகள் யார்?

டாக்டர் இரா.சிதம்பரம், டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம்.

93. தமிழ்நாட்டில் அணுமின்நிலையம் எங்குள்ளது?

கல்பாக்கத்தில் உள்ளது.

94. கரி-14இன் சிறப்பென்ன?

அது ஒரு சுவடறி தனிமம்.

95. சுவடறி தனிமம் என்றால் என்ன?

இது ஒரு தனிமத்தின் ஒரிம்ம் (ஐசோடோப்) விரவல் முதலிய இயற்பியல் முறைகளையும் வேதி வினைகளையும் ஆராயப் பயன்படுவது.

96. சுவடறி நுட்பம் என்றால் என்ன?

வழியறியும் முறை. வேதி நுணுக்கம்.

97. ஒரிமம் என்றால் என்ன?

ஒரிடத் தனிமம். வேறுபட்ட நிறையும் ஒரே அணு எண்ணுங் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள். எ-டு. டியூட்ரியம், ட்ரைட்டியம் என்பவை அய்டிரஜனின் ஒரிமங்கள்.

98. ஒரிமங்களின் பயன்கள் யாவை?

மருத்துவம், வேளாண்மை, தொல் பொருளியல் முதலிய துறைகளில் பயன்படுதல்.