பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

நிலத்திற்குக் கடத்திக் கேட்டைத் தவிர்க்கும்.

26. புயல் என்றால் என்ன?

முகில் மற்றும் மழையை உருவாக்கிய வண்ணம் சூறைக்காற்று சுழியிட்டுச் செல்லும். இவ்வாறு சுழியிட்டுச் செல்லும் குறையழுத்தப் பகுதியே புயல்.

27. புயல் வழியறிதல் என்றால் என்ன?

திரட்டிய வானிலைச் செய்திகளைக் கொண்டு புயல் எவ்வாறு உருவாகி மேல் நகர்ந்து செல்லும் என்பதை அறிந்து, அதன் தீய விளைவை அறிவித்தல். இதற்கு வானிலை நிலாக்கள் பெரிதும் பயன்படுகின்றன. தமிழ்நாட்டுக்கு நவம்பர் புயல் மாதம்.

28. முகில்கள் என்றால் என்ன?

இவை ஒருவகையில் உயர்மட்டத்தில் தோன்றும் மூடுபனியே. காற்றுவெளியில் உண்டாகும் நிகழ்ச்சிகளை விளக்குபவை. நடப்பிலிருக்கும் வானிலை நிலை மைகளை எடுத்துக் காட்டுபவை.

29. முகில்களின் வகைகள் யாவை?

1. மேல்மட்ட முகில்கள். 2. இடைமட்ட முகில்கள். 3. கீழ்மட்ட முகில்கள். 4. செங்குத்து முகில்கள்.

30. கூழ்மப் படலம் (ஏரோசால்) என்றால் என்ன?

இது ஒரு கூழ்மத் தொகுதி. இதில் சிதறிய ஊடகம் வளி. எ.டு. மூடுபனி, பனி.

31. பனி என்றால் என்ன?

குளிர்ந்த பரப்பில் காற்றிலிருந்து நீர்த்துளிகள் சுருங்குதல் காற்று வெப்பநிலை நீரின் உறைநிலைக்குக் கீழ் இருக்கும்போது, காற்று நீராவி படிகமாக உறைவது.

32. பனிநிலை என்றால் என்ன?

காற்றிலுள்ள நீராவி நிறைவுறும் வெப்பநிலை. வெப்பநிலை குறையும்பொழுது இந்நிலையில் நீராவி குளிர்ந்து நீர்த்துளிகள் ஆகும்.

33. ஈரநிலைமானி என்றால் என்ன?

காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்குங் கருவி.

34. ஈரநிலைநோக்கி என்றால் என்ன?