பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31.

52.

81

செயல்களை சில விதிகளின்படி எளிதாகச் செய்யலாம். 2. இந்த எண்முறை மனிதக் கண்டுபிடிப்புகளில் மிகப் பெரிய ஒன்று.

எண்முறையின் வரலாறு யாது? நம் நாட்டுக் கணித மேதை பாஸ்கரர் முதன் முதலாக கி.பி. 500வாக்கில் ஒன்றும் இல்லை' என்பதற்குக் குறியுடன் இட மதிப்பு முறையில் அமைந்த எண் முறையைப் பயன்படுத்தினார். அவர் காலத்தில்

தற்பொழுது நாம் எண்ணின் வலக்கோடியில் ஒன்றுகள் இடம் வைத்து எழுதுகின்றோம். பாஸ்கரர் காலம் முதல் இந்திய எண்முறையில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்பட்ட பின் இந்து-அரபு எண்முறை உருவாயிற்று. இதுவே இன்று உலக அளவில் பயன்படும் முறை. எண்முறையின் கொள்கை யாது? இக்கொள்கை 9 பிரிவுகளைக் கொண்டது. 1. 2ஆல் மீதியில்லாமல் வகுபடும் எண்கள் இரட்டை எண்கள் (4). அவ்வாறு வகுபடாதவை ஒற்றை எண்கள் 14/2 = 7. 2. எந்த எண்களுக்கு ஒன்று மட்டுமே வகு எண்ணிக்கை இருக்கின்றதோ அந்த எண்கள் பகா எண்கள். 3. எந்த எண்களுக்கு 1ஐயும் அந்த எண்களைத் தவிர வேறு எண்களும் வகு எண்களாக இருக்கின்றனவோ அவை பகு எண்கள். 4. ஓர் எண்ணுக்கு 1, இந்த எண், இவைகளைத் தவிர மற்ற வகு எண்கள் இந்த எண்களின் காரணி எனப்படும். 5. ஒர் எண்ணின் காரணிகள் பகா எண்களாகப் பிரித்துக் காட்டப்பட்டால், அவை பகாக் காரணிகள். 6. ஒர் எண்ணின் ஓர் இயல் எண்ணால் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்கற்பலன் அந்த எண்ணின் மடங்கு ஆகும். 7. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களின் மீப் பெரு வகுஎண், அந்த எல்லா எண்களையும் மீதியின்றி

வகுக்கும். Eé·