பக்கம்:அலிபாபா.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வெகு நேரம் உள்ளே தங்கியிருந்தார்கள். அலிபாபா கீழே இறங்கிச் செல்ல முடியாமல், துடித்துக் கொண்டிருந்தான். அவன் இறங்கிய சமயத்தில், திருடர்கள் வெளியே வந்து விட்டால் என்ன செய்வது? ஆனால், மரத்தின் மேலே எவ்வளவு நேரம் குந்தியிருப்பது? அவன், மெதுவாகக் கீழே இறங்கி, ஒரு குதிரை மேல் ஏறிக் கொண்டு, தன் கழுதைகளை ஓட்டிச் செல்லலாம் என்று எண்ணினான்.

அந்த நேரத்தில் குகையின் வாயில் திறந்து, திருடர்கள் வெளியே வரத் தொடங்கினர். தலைவன், முன் போலவே, வாயிலில் நின்று கொண்டிருந்தான்; எல்லோரும் வெளியேறிய பிறகு, அவன் “ஓ ஸிம்ஸிம், மூடிக் கொள்!” என்று சொன்னான். பாறை, குகையின் வாயிலை மூடிக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/10&oldid=946989" இலிருந்து மீள்விக்கப்பட்டது