இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருடர்களின் சூழ்ச்சிகள்
வனத்திலே திருடர்கள் தங்கள் வழக்கம் போல் ஒரு நாள் குகைக்குள்ளே சென்றிருக்கையில், அங்கே இவர்கள் மாட்டி வைத்திருந்த காஸிமின் உடலைக் காணாமல் ஆச்சரியடைந்தனர். ஓர் அங்கம், ஓர் எலும்பு கூட இல்லாமல், எல்லா அங்கங்களும் எப்படி மாயமாய் மறைந்தன என்று அவர்கள் கூடி யோசித்தனர்.