பக்கம்:அலிபாபா.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உங்களைக் கவனித்துக் கொள்வேன். உங்களுடைய அடிமையாகிய நான் தங்களுக்காக எதையும் செய்யத் தயாராயிருக்கிறேன்!”

இந்த வார்த்தைகளைக் கேட்டு அலிபாபா மிகவும் மகிழ்ச்சியடைந்து, “இதுவரை நீ செய்து முடித்த அரிய காரியங்களைக் கேட்டு உன்னை நான் மெச்சுகிறேன். உனக்கு நான் கைம்மாறாக என்ன செய்ய வேண்டும் என்பதை உடனே நீ சொல்ல வேண்டும்! என் உடலில் மூச்சு உள்ள வரை, நான் உன் உதவிகளை மறக்க மாட்டேன்!” என்று கூறினான். மார்கியானா “அதெல்லாம் இருக்கட்டும். முதலில் நாம் இந்தப் பினங்களை மண்ணுக்குள் புதைக்க வேண்டும். இல்லாவிட்டால், மற்றவர்களுக்கு விவரம் வெளியாகிவிடும் அல்லவா?” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/57&oldid=947032" இலிருந்து மீள்விக்கப்பட்டது