பக்கம்:அலிபாபா.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அலிபாபா


 அலிபாபாவும், அடிமைப் பையன் அப்துல்லாவும் கொல்லைத் தோட்டத்தில் ஒரு பெருங்குழியை வெட்டினார்கள். அதிலே திருடர்களுடைய உடல்களையெல்லாம் தள்ளி, மீண்டும் குழியின்மீது மண்கொட்டி நிரப்பினார்கள். திருடர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும், தோலாலான தாழிகளையும் வெளியே வேறிடத்தில் அவர்கள் மறைத்து வைத்தார்கள். கொட்டகையில் நின்று கொண்டிருந்த கோவேறு கழுதைகளை, இரண்டு இரண்டாகவும், மூன்று மூன்றாகவும் சந்தைக்குக் கொண்டுபோய், அத்தனையையும் அப்துல்லா விற்றுக் காசாக்கி விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/58&oldid=512504" இலிருந்து மீள்விக்கப்பட்டது