பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அவள் விதித்ழிருந்தான்்

விடக்கூடாது?' வெளியே புறப்பட்டுப்போனான். திரும்பி வந்தான்். பையில் கொஞ்சம் துணிமணிகள். அவ்வளவுதான்்.

அவன் எங்கே போனாலும், எப்போ வந்தாலும் அவள் அதிகமாகக்கேள்விகள் கேட்பது வழக்கமில்லை. 'எங்கேயாவது போவார்' என்று நினைக்துக்கொள்வாள். அப்படியே அன்று சாப்பிட்டபிறகு கிளம்பினான். ஊஞ்சலில்தூங்கும் மனைவியை ஆசை தீரப்பார்த்தான்். ஆறேழு வருஷங்களாக அறிமுகமான ஒருத்தரைப் பிரிந்துபோசிற அளவே அவனுள் ஒரு ஏக்கம் எழுந்தது. அவளிடம் ஒரு மரியாதை, பக்தி ஏற்பட்டது. இன்றுவரை இவள் என்னுடையவள் என்கிற பெருமை ஏற்பட்ட து.

கொஞ்சநேரம் நின்று பார்த்து விட்டு வாசற்கதவை லேசாகத் திறந்துகொண்டு வெளியே வந்தான்். பக்கத்து வீட்டில் பூரணி பிறந்த வீட்டிலிருந்து மற்றொரு குழந்தை யுடன் வண்டியில் வந்து இறங்கினாள். இவனைத் திரும் பிப் பார்த்தாள். பாலுவிடம் குழந்தையைக் கொடுத்தாள். இருவரும் உள்ளே போய்விட்டார்கள்.

அவன் தெருவில் இறங்கி ரயில் நிலையத்தை நோக்கி நடந்தான்். எதிலிருந்தோ விடுதலை பெற்ற உணர்வுடன் கிளம்பிப்போய்க் கொண்டிருந்தான்்.

நர்மதா விழித்தபிறகு வழக்கம்போல் வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டாள்.

பக்கத்து வீட்டில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. பார்க்கப்போனாள். முதல் குழந்தையைவிட இது நன்றாக இருந்தது.

" எப்படி இருக்கேடி நர்மதா என்று கேட்டாள் பூரணி. "அப்படியேதான்் இருக்கேன்' 'நீ எப்பப்பாத்தாலும் கதவை அடைச்சுண்டு கிடக்கிற யாமே...இவர் சொன்னார்.'

'பின்னே என்ன பண்றது? எங்காத்துகாரர் வீட்டிலேயே தங்கறதில்லை. ஒண்டியா வாசக்கதவை திலந்து வச்சுண்டு உக்கார முடியுமா?"

வாஸ்தவம்தான்். கண்டவா உள்ளே வந்துட்டா?"