பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அவள் விழித்திருந்தாள்

பாகக் கோர்ட் கொத்தளம் என்று கொண்டு வந்து நிறுத்தா மல், பெருந்தன்மையுடன் அவளுக்கு விடுதலை வழங்கியவன்.

நர்மதா தலைகுனிந்து நின்றிறுந்தாள். சொட்டுச் சொட் டாகக் கண்ணிர் பூமியில் விழுந்து தெரித்துக்கொண்டிருந்தது. பூரணி நன்றாகத்தேம்பி அழுதாள்.

"இப்போநான் என்னசெய்யனும்?' என்று கேட்டான்பாலு.

"ஒரு வக்கிலப்பாத்து, என் பேரில் அவ போட்ட ரொக் கத்திைத்தவிர, மற்றதை கங்கம்மா பேரில் ஒரு டிரஸ்ட் ஆக மாத்தனும். ஆஸ்ப த்திரிகளுக்கு, க ல் வி நிலையங்களுக்கு, குழந்தைகள் விடுதிக்கு அந்த வருமானம் போகிற மாதிரி பண்ணனும்.' . "நீ என்னம்மா பண்ணப்போறே?"

அம்மா என்கிற சொல்லைக்கேட்டு அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். o சினிமா போஸ்டர்களில் சீரழியும் பெண்கள், இரவில் கொஞ் சம் நேரம் கழித்து வீதியில் நடந்தால் லிப்ட் கொடுப்பதாகச் சொல்லிக் கூப்பிட்டு, அவர்களைக் கேவலப்படுத்த எண்ணும் ஆண்கள். .பெண் ! அவள் தாயாக, அக்காவாக, மகளாக இன்னும் பலப்பல உறவுகளுடன் இருப்பவள். அவளை மனை வியாக மட்டும் நினைக்கிறதை, மதிக்கிறதை...'

'நானும் அம்மாவும் வடக்கே போ கலாம்னு இருச் கோம். பத்ரி வரை போய்ப்பார்க்கிறது. எ ன க் கு அதிர்ஷ்டமிருந்தா ல் அவரை எங்கேயாவது பார்க்க முடியும் . - பாலு கலங்கினான். இவள் தன்னிடம், தன் ஆண்மையிடம் சரண் அடைந்து விடுவாள் என்று நினைத்திறுந்தவன், கண் கலங்க உட்கார்ந்திருந்தான்். - L.

ーロー