பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 5 அவள் விழித்திருந்தாள்

  • உன்னை மறந்துடவா டோறேன். எல்லாத்தையும் கவு னிச்சுக்கோ... தேங்காய் பறிச்சுக்கோ... ஒரு நல்ல நாளாப் பார்த்துண்டு இந்த வீட்டுக்கு வந்துடுங்கோ. கங்கம்மா குழந் தைக்ளுக்கு ஆசைபட்டாள். ஒங் குழந்தைகள்தான்் ஒடி விளை பாடட்டுமே ...வேணு இன்னும் இரண்டு பெத்துக்கறது...' என்று கிண்டல் பண்ணினாள்.

"பெத்துக்க வேண்டியதுதான்்!' பாரேன். நான் திரும்பி வரச்சே உனக்கு நாலுக்குமேலே இருக்கப்போறது!" o

'போடி..." பூரணி சிரிக்கவில்லை. துயரம் தாங்காமல் நர்மதாவைக் கட்டிக்கொண்டாள். os

கிளம்புகிறதற்கு முதல்நாள் வரையில் நர்மதா அம்மா கட்டி வைத்திருக்கும் மூட்டை முடிச்சுகளைக் கவனிக்கவில்லை. நாலைந்து தகரடப்பாக்கள். நார்ம்டிக்கூடை. பெட்டிவேறே.

'பெட்டியிலே என்னம்மா?" 'ஒனக்கு நாலு பட்டுப்புடவை எடுத்து வச்சிருக்கேன்.'

போருமே. எல்லாத்தையும் எ டு த் து உள்ளே வை. இல்லைன்ன யாரையாவது கூப்பிட்டுக் குடுத்துடுவேன்."

கிழவி முனு முணுத்துக் கொண்டே எடுத்து வைத்தாள்.

கங்கா காவேரியில் ஜன்னல்ஒரம் உட்கார்ந்திருந்த நர்மதா, வெகுநேரம் வரையில் பேசவில்லை. ரயில் கிருஷ்ணு நதியைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது பொங்கித் துளும்பி பிரவகிக்கும் தண்ணிரைக் கண் கொட்டாமல் பார்த்தான்். எத்த ைபேருடைய தாடக்கை, பாபத்தை இந்தப் புனித நதி பேர்க்கியிருக்கும்? ரயிலின் ஒரமாக மலைகள் வந்தன. சமவெளி வந்தது. அடர்ந்த காடுகள் வந்தன. தரிசு நிலங்கள் வந்தன. அட்ர்ந்த காடுக்ள் வந்தன. தரிசு நிலங்கள் வந்தன. இரவில் சத்திரிகை பிரகாசித்தது. on

அவள் தன்னிடமிருந்து ஒரு பாரம் குறைவதை உணர்ந்தாள்.