பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

பெண் : மலர் மாலை சூட்டி
பலபேரும் வாழ்த்த
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டி
புதுப்பாதை காட்டி
உறவாடும் திருநாளின் இரவில் (என்னை)

ஆண் : இளந்தென்றல் காற்றும்
வளர் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும்
கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில்

ஆண்: ஆ...ஆ... ஆ...

பெண்: ஓ...ஓ....ஓ...

குமுதம்-1960


இசை: K. V. மகாதேவன்

பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா