இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
99
- கோடி கோடி இன்பம் தரவே!
- தேடி வந்த செல்வம்!
- கொஞ்சும் சதங்கை கலீர் கலீரென
- ஆட வந்த தெய்வம்!
- பாடும் பாட்டின் பாவம் தன்னை
- பார்வை சொல்லிடவே!
- ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம்
- அசைந்தே துள்ளிடவே!
- முழு நிலவென அழகு மலரென
- முகங் காட்டியே பருவமங்கை உருவாய் (கோடி)
- வாடும் பயிரை வாழச் செய்ய
- மேகம் வந்தது போல்
- வாச மலரும் அன்பினாலே
- தேனைத் தந்தது போல்
- கனிமொழியுடன், கருணை விழியுடன்
- களிப்பூட்டவே கலைஞானவடிவாய் (கோடி}
ஆடவந்த தெய்வம்-1960
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர் : T. R. மகாலிங்கம்