பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106


பெண் : வெத்தலை பாக்கு வச்சு-விருந்தை
வீட்டிலே கூட்டி வச்சு-தாலி
கட்டி என் கைபுடிச்சு கலந்திட வேண்டும்!


ஆண் : குத்து விளக்கு வச்சு-குலுங்கும்
மெத்தையில் பூவிரிச்சு-இனிக்கும்
வித்தையெல்லாம் படிச்சு சுகம் பெற வேண்டும்.


பெண் : காலாட மேலாடக் கையாட முகம் சிவக்கும்!


ஆண் : என் கைகளில் உன் பூவுடல் மிதக்கும்.
(மழை)


தேர்த் திருவிழா-1968
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா