பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113


மியாவ்! மியாவ்!
மியாவ்! மியாவ்! பூனைக்குட்டி!
வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி!
அத்தான் மனசு வெல்லக்கட்டி-அவர்
அழகு எப்படி சொல்லுகுட்டி!
அங்கமெல்லாம் பளபளக்கும்
தங்க நிறம் என்பது போல் -
அவரின் திருவுருவம் தகதகன்னு ஜொலிக்குமா?
அந்தமுள்ள சந்திரனை
உவமை சொல்வது போல்-யாரும்
ஆசை கொள்ளும் வண்ணம் மலர்முகமும் இருக்குமா?
(மியாவ்)


செங்கரும்பாய் இனித்து!-அவர்
சொல்லும் என்னை மயக்கிடுதே!
சிரிப்பும் அதைப் போல எனை
மயங்கச் செய்யுமா?
பொங்கி எழும் ஆவலினால்
மங்கை நான் கேட்கிறதை
புரிந்துகொண்டு பதில் எனக்கு சொல்ல உனக்குத் தெரியுமா?
குமுதம்-1961
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி