பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114


ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை!
பெண் : ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை!
ஆண் : வண்ணம் பல மின்னும்-அதில்
பிள்ளை போலவே !
பெண் : எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்
நம்மைப் போலவே!
ஆண் : மனக் கண்கள் அந்தக் கனவே காணுதே!
பெண் : நாம் காணும் இன்பம் நிலையாய்த் தோணுதே!
ஆண் : எண்ணும் எண்ணம் யாவும் என்றும்
உன்னைப் பற்றியே!
பெண் : அது இன்பம் இன்பம் என்று ஆடும்
உன்னைச் சுற்றியே!
ஆண் : அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே
பெண் : அது உன்னைப் போல சிரிப்பை மூட்டுதே!
வெள்ளிக்கிழமை விரதம்-1974
இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா