இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
120
- ஆண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம்
- முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்
- பெண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம்
- முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்
- (மூங்கில்)
- முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்
- ஆண் : நாதம் இல்லை யென்றால் கீதம் கிடையாது
- பெண் : ராகம் இல்லை யென்றால் தாளம் கிடையாது!
- ஆண் : காதல் இல்லை யென்றால் உலகம் கிடையாது
- பெண் : கண்கள் இல்லை யென்றால் காட்சியும் கிடையாது!
- (மூங்கில்)
- ஆண் : கண்கள் இருந்தென்ன? காட்சியும் இருந்தென்ன?
- கொஞ்சும் மொழியில்லை! குறிப்பும் தெரியவில்லை!
- பெண் : பிஞ்சும் காயாகும்! காயும் கனியாகும்!
- கனியில் சுவையிருக்கும்! காலம் வந்தால் பலன் கொடுக்கும்
- (மூங்கில்)
- கனியில் சுவையிருக்கும்! காலம் வந்தால் பலன் கொடுக்கும்