பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120


ஆண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்
பெண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்
(மூங்கில்)


ஆண் : நாதம் இல்லை யென்றால் கீதம் கிடையாது
பெண் : ராகம் இல்லை யென்றால் தாளம் கிடையாது!
ஆண் : காதல் இல்லை யென்றால் உலகம் கிடையாது
பெண் : கண்கள் இல்லை யென்றால் காட்சியும் கிடையாது!
(மூங்கில்)


ஆண் : கண்கள் இருந்தென்ன? காட்சியும் இருந்தென்ன?
கொஞ்சும் மொழியில்லை! குறிப்பும் தெரியவில்லை!
பெண் : பிஞ்சும் காயாகும்! காயும் கனியாகும்!
கனியில் சுவையிருக்கும்! காலம் வந்தால் பலன் கொடுக்கும்
(மூங்கில்)